NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
    இந்திய ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 30, 2024
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன.

    மோசடிகள் போலி லாட்டரி வெற்றி எனத் தொடங்கி, வங்கி கணக்கை முடக்குவதாக அச்சுறுத்தலை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நூதன முறைகளை பின்பற்றுகின்றனர்.

    இதற்கான போலியான ஆர்பிஐ லெட்டர்ஹெட்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாது சிறு மற்றும் நடுத்தர வணிகங்களும் இந்த மோசடிக்கு பலியாகும் போக்கு அதிகரித்து வருகிறது.

    இவை தவிர கொரோனா தொடங்கியது முதல் வேரூன்றியுள்ள அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் செயலிகளின் மோசடிகளும் தொடர்கின்றன.

    பொது ஆலோசனை

    ரிசர்வ் வங்கியின் விளக்கம்

    தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கான கணக்குகளை தாங்கள் பராமரிப்பதில்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

    ஆர்பிஐ லாட்டரி வெற்றிகள் அல்லது நிதி விநியோகம் பற்றிய மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளை அனுப்புவதில்லை என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் நபர்களின் அழைப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது பிற தகவல்தொடர்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.

    தனிப்பட்ட தகவல்கள், கணக்கு விவரங்கள் அல்லது கேஒய்சி ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்களுடன் அல்லது சரிபார்க்கப்படாத இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் பகிரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

    சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சைபர் கிரைமை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    சைபர் கிரைம்
    ஆன்லைன் மோசடி

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்

    ரிசர்வ் வங்கி

    4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி பொருளாதாரம்
    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் இந்தியா
    காலக்கெடுவை தவறவிட்டு விட்டீர்களா? இனி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி? இந்தியா
    தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு! கடன்

    ஆர்பிஐ

    50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ  வணிகம்
    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ரிசர்வ் வங்கி
    பிப்ரவரி 29க்குப் பிறகு உங்கள் Paytm FASTags என்னவாகும்? ரிசர்வ் வங்கி

    சைபர் கிரைம்

    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்
    லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!  இன்ஸ்டாகிராம்
    பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை! இந்தியா
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025