NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு
    அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு

    அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 15, 2024
    06:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, எதிர்கால பணத் தேவைகளுக்கு போதுமான சேமிப்பு மற்றும் கையாளும் திறனை உறுதி செய்வதே இந்த மறுசீரமைப்பின் முதன்மை நோக்கமாகும்.

    தற்போதுள்ள அமைப்பை நவீனமயமாக்குவதற்கான உத்திகளை கோடிட்டுக் காட்டிய ஆர்பிஐ ஆவணத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கியின் நவீனமயமாக்கல் திட்டத்தில் புதிய நாணய மேலாண்மை மையங்களை நிறுவுதல் மற்றும் கிடங்கு ஆட்டோமேஷனை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

    ரிசர்வ் வாங்கி மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள், ஒரு சரக்கு மேலாண்மை அமைப்பு மற்றும் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளை மையம் ஆகியவற்றை நிறுவ விரும்புகிறது.

    எதிர்கால கணிப்புகள்

    நோட்டு புழக்கத்தில் தொடர்ந்து வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது

    கடந்த மூன்று ஆண்டுகளில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் வளர்ச்சி விகிதம் (என்ஐசி) மந்தமாக இருந்தாலும், இந்த போக்கு தொடரும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

    ஆர்பிஐ ஆவணத்தில், "அடுத்த பத்தாண்டுகளில் அதன் வேகம் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எதிர்பார்க்கக்கூடிய எதிர்காலத்தில் வளர்ச்சி தொடர்ந்து நேர்மறையானதாக இருக்கும் என்பதை பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது." எனக் கூறப்பட்டுள்ளது.

    தொகுதி வளர்ச்சி தொடரும் மற்றும் வேகமெடுக்கும் என்று ஆர்பிஐ எதிர்பார்க்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக என்ஐசியின் அளவு மற்றும் மதிப்பு இரண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

    மார்ச் 31, 2024 நிலவரப்படி, என்ஐசியின் அளவு 146.87 பில்லியன் துண்டுகளாக (bpcs) இருந்தது. இது மார்ச் 31, 2023 அன்று 136.21 bpcsஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இலக்குகள்

    நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை நவீனமயமாக்க திட்டம்

    ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    பொருளாதாரத்தின் எதிர்கால பணத் தேவைகளுக்கு போதுமான அதிநவீன சேமிப்பு மற்றும் கையாளும் திறனை உருவாக்குதல், நாணய மேலாண்மை நடவடிக்கைகளில் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பசுமையான கிரகத்திற்கு பங்களிக்கும் போது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் குறிக்கோளாகும்.

    அச்சிடப்பட்ட, விநியோகிக்கப்பட்ட, மீட்டெடுக்கப்பட்ட மற்றும் செயலாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் அளவு அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக உலகளவில் பல மத்திய வங்கிகள்/பணவியல் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்பிஐ
    இந்தியா
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆர்பிஐ

    50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ  வணிகம்
    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் இந்தியா
    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ரிசர்வ் வங்கி

    இந்தியா

    நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம் விண்வெளி
    இந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போலாமா ஒரு குளுகுளு ட்ரிப் மலைகள்
    உலக மின்சார வாகன தினம் 2024: வரலாறும் முக்கியத்துவமும் மின்சார வாகனம்
    இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது; விண்ணப்பிப்பது எப்படி? இந்திய ரயில்வே

    ரிசர்வ் வங்கி

    தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு! கடன்
    சில்லறை பணவீக்கம் 5 மாதம் இல்லாத அளவு சரிந்தது  இந்தியா
    பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை: ரிசர்வ் வங்கி அதிரடி  பஜாஜ்
    இந்தியாவில் குறைந்த சில்லறைப் பணவீக்கம்; ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025