Page Loader
நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் ₹25,000 வரை எடுத்துக் கொள்ள ஆர்பிஐ அனுமதி
நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.25,000 வரை எடுத்துக் கொள்ள அனுமதி

நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் ₹25,000 வரை எடுத்துக் கொள்ள ஆர்பிஐ அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 24, 2025
08:05 pm

செய்தி முன்னோட்டம்

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையாளர்கள் பிப்ரவரி 27 முதல் ₹25,000 வரை பணம் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது. பிப்ரவரி 13 அன்று அனைத்து பணத்தையும் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு வங்கியில் கணக்கு வைத்துள்ள 50% க்கும் மேற்பட்ட வைப்புத்தொகையாளர்கள் தங்கள் முழு நிலுவைகளையும் எடுக்க உதவும். மற்றவர்கள் கிளைகள் அல்லது ஏடிஎம்கள் மூலம் ₹25,000 வரை எடுக்கலாம். சில ஊழியர்களால் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து ஆர்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பொது மேலாளர்

122 கோடியை மோசடி செய்த பொது மேலாளர்

பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா காலப்போக்கில் வங்கியின் பெட்டகத்திலிருந்து ₹122 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி புதிய கடன் வழங்கல்களைத் தடைசெய்துள்ளது. மேலும், வைப்புத்தொகை திரும்பப் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது மற்றும் தவறான நிர்வாகத்திற்காக வங்கியின் வாரியத்தை மாற்றியுள்ளது. புதிதாக மறுசீரமைக்கப்பட்ட ஆலோசகர்கள் குழுவின் ஆதரவுடன், 12 மாதங்களுக்கு செயல்பாடுகளை மேற்பார்வையிட எஸ்பிஐயின் முன்னாள் தலைமைப் பொது மேலாளரான ஸ்ரீகாந்த் என்ற புதிய நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2024 நிலவரப்படி, மும்பையை தளமாகக் கொண்ட இந்த வங்கி 28 கிளைகளைக் கொண்டிருந்தது.