LOADING...
பிபிஎஃப் vs எஸ்ஐபி: 10 ஆண்டுகளில் அதிக லாபம் தருவது எது? ஒரு விரிவான ஒப்பீடு
பிபிஎஃப் vs எஸ்ஐபி ஒப்பீடு

பிபிஎஃப் vs எஸ்ஐபி: 10 ஆண்டுகளில் அதிக லாபம் தருவது எது? ஒரு விரிவான ஒப்பீடு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2026
08:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் நீடிக்கும் ஒரு விவாதம், "பணத்தைப் பாதுகாப்பான அரசுத் திட்டத்தில் போடலாமா அல்லது அதிக லாபம் தரும் பங்குச்சந்தையில் போடலாமா?" என்பதுதான். ஆண்டுக்கு ₹10,000 என 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யும் போது, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் பரஸ்பர நிதி (எஸ்ஐபி) ஆகிய இரண்டும் வெவ்வேறு விதமான பலன்களைத் தருகின்றன. இதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃப்

பிபிஎஃப்: உறுதியான லாபம் மற்றும் வரிச் சலுகை

அரசின் முழுப் பாதுகாப்பைக் கொண்ட பிபிஎஃப் திட்டம் தற்போது 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் சிறப்பம்சமே 'EEE' (Exempt-Exempt-Exempt) அந்தஸ்து தான். அதாவது நீங்கள் முதலீடு செய்யும் தொகை, அதற்கு கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றிற்கும் வரி விலக்கு உண்டு. ஆண்டுக்கு ₹10,000 வீதம் 10 ஆண்டுகள் முதலீடு செய்தால், 7.1% வட்டியில் உங்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை சுமார் ₹1.38 லட்சம் ஆகும். இது சந்தை மாற்றங்களால் பாதிக்கப்படாத நிலையான வருமானமாகும்.

எஸ்ஐபி

எஸ்ஐபி: சந்தை அபாயமும் அசுர வளர்ச்சியும்

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது நீண்ட காலத்தில் அதிக லாபத்தைத் தரக்கூடியது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்றாலும், சராசரியாக 12% முதல் 15% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 12% வருமானம் எனக் கணக்கிட்டால், 10 ஆண்டுகளில் உங்கள் முதலீடு சுமார் ₹1.95 லட்சமாக வளரக்கூடும். வரி செலுத்திய பிறகும், இது பிபிஎஃப்யை விட 40% முதல் 60% வரை கூடுதல் லாபத்தைத் தர வாய்ப்புள்ளது.

Advertisement

தேர்வு

ரிஸ்க் மற்றும் பொருத்தமான தேர்வு

முதலீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது வெறும் லாபத்தை மட்டும் பார்க்கக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிம்மதி முக்கியம் என்றால், பங்குச்சந்தையின் வீழ்ச்சிகளைக் கண்டு பதற்றமடைபவர்களுக்கு பிபிஎஃப் சிறந்த தேர்வாகும். வளர்ச்சி முக்கியம் என்றால் நீண்ட கால இலக்குகளைக் கொண்டு, சந்தை மாற்றங்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு எஸ்ஐபி அதிக செல்வத்தை சேர்த்துத் தரும்.

Advertisement

சிறந்த உத்தி

சிறந்த உத்தி: இரண்டையும் கலப்பது

இன்றைய சூழலில் இதுவா? அதுவா? என்று ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில், இரண்டிலும் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். உதாரணமாக, உங்கள் முதலீட்டில் 60% தொகையை எஸ்ஐபியிலும், 40% தொகையை பிபிஎஃப்பிலும் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் சமமாகப் பெற முடியும். இது ஒரு சமநிலையான போர்ட்ஃபோலியோவை உருவாக்க உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Advertisement