NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரிலையன்ஸ் குழுமத்தில் பெரும் மாற்றங்கள் அறிவிப்பு: குழும இயக்குநர் ஆகிறார்கள் அம்பானியின் வாரிசுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிலையன்ஸ் குழுமத்தில் பெரும் மாற்றங்கள் அறிவிப்பு: குழும இயக்குநர் ஆகிறார்கள் அம்பானியின் வாரிசுகள் 
    முகேஷ் அம்பானியின் வாரிசுகளின் நியமனத்தை ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

    ரிலையன்ஸ் குழுமத்தில் பெரும் மாற்றங்கள் அறிவிப்பு: குழும இயக்குநர் ஆகிறார்கள் அம்பானியின் வாரிசுகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 28, 2023
    03:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார்.

    மேலும், முகேஷ் அம்பானியின் வாரிசுகளான இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

    முகேஷ் அம்பானியின் வாரிசுகளின் நியமனத்தை ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

    இந்த மூன்று அம்பானி வாரிசுகளும் கடந்த சில ஆண்டுகளாக சில்லறை விற்பனை, டிஜிட்டல் சேவைகள், எரிசக்தி மற்றும் பொருட்கள் வணிகங்கள் உட்பட ரிலையன்ஸின் முக்கிய வணிகங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.

    அவர்கள் ரிலையன்ஸின் முக்கிய துணை நிறுவனங்களிலும் பணியாற்றி வந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    ஜியூப்கஞ்

    நீதா அம்பானியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது 

    கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி(66), இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக தனது முதல் மகனான ஆகாஷ் அம்பானியை(31) நியமித்தார்.

    ஆகாஷின் இரட்டை சகோதரியான இஷா, ரிலையன்ஸின் சில்லறை விற்பனைப் பிரிவை மேற்பார்வையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதே நேரத்தில், முகேஷ் அம்பானியின் இளைய வாரிசான ஆனந்த் அம்பானி புதிய எரிசக்தி வணிகத் துறையில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று நீதா அம்பானியின் ராஜினாமாவை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், நீதா அம்பானி தொடர்ந்து அனைத்து வாரியக் கூட்டங்களிலும் நிரந்தர அழைப்பாளராக பங்கேற்பார் என்றும், அவர் அப்படி பங்கேற்பதனால் அவரது ஆலோசனையிலிருந்து நிறுவனம் தொடர்ந்து பயனடையும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்
    ஜியோ

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! தொழில்நுட்பம்
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்

    ஜியோ

    ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா? இந்தியா
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் தொழில்நுட்பம்
    புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும் தொழில்நுட்பம்
    ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025