NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / புழக்கத்தில் உள்ள புதிய, உயர்தர ரூ.500 கள்ள நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    புழக்கத்தில் உள்ள புதிய, உயர்தர ரூ.500 கள்ள நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது
    கள்ள நோட்டுகள் குறித்து உள்துறை அமைச்சகம் (MHA) எச்சரிக்கை விடுத்துள்ளது

    புழக்கத்தில் உள்ள புதிய, உயர்தர ரூ.500 கள்ள நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 21, 2025
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்தையில் புழக்கத்தில் உள்ள புதிய வகை ₹500 கள்ள நோட்டுகள் குறித்து உள்துறை அமைச்சகம் (MHA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த எச்சரிக்கை, DRI, FIU, CBI, NIA, SEBI உள்ளிட்ட அனைத்து முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    கள்ள நோட்டுகள் தரம் மற்றும் அச்சில் உண்மையான நோட்டுகளைப் போலவே இருப்பதால், அவற்றைக் கண்டறிவது கடினம்.

    அடையாளம்

    போலி ரூபாய் நோட்டுகளை நுட்பமான எழுத்துப் பிழை வேறுபடுத்துகிறது

    போலி ₹500 நோட்டுகள் உண்மையான நோட்டுகளைப் போலவே இருக்கின்றன, மேலும் ஒரு சிறிய ஆனால் முக்கியமான எழுத்துப் பிழைதான் அவற்றைப் புலப்படுத்துகிறது.

    "RESERVE BANK OF INDIA"-ல், "RESERVE"-ல் உள்ள "E"-க்கு பதிலாக "A"-ஐ தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

    ஒருவர் கூர்ந்து ஆராயாவிட்டால், இந்த பிழையை எளிதில் தவறவிடலாம்.

    இதனால் இந்தப் போலிகள் மிகவும் ஆபத்தானவை என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.

    கண்காணிப்பு

    நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன

    இந்த போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் கருத்தில் கொண்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    சந்தேகிக்கப்படும் போலி நாணயத்தின் படமும், ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண உதவும் வகையில் பரப்பப்பட்டுள்ளது.

    குடிமக்களும், நிறுவனங்களும் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நாணயங்களை கண்டால் தெரிவிக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தடுப்பு

    கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

    பயங்கரவாத நிதி விசாரணையுடன் தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையை எந்த நிறுவனத்தாலும் உறுதி செய்வது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

    அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் ஒரே தரவு, பொதுமக்களால் வங்கிகளில் சமர்ப்பிக்கப்படும் கள்ள நோட்டுகள் உட்பட பல்வேறு ஆதாரங்கள் மூலம் மட்டுமே.

    இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் உண்மையான எண்ணிக்கையைப் பிரதிபலிக்கவில்லை.

    நடவடிக்கைகள்

    கள்ளநோட்டு பிரச்சினைக்கு அரசாங்கத்தின் பதில்

    பாராளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதங்களில், போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் விவாதித்துள்ளது.

    பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிகள் இதில் அடங்கும்.

    இந்தப் பிரச்சினையை திறம்பட நிவர்த்தி செய்வதற்காக, தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), FICN ஒருங்கிணைப்புக் குழு (FCORD) மற்றும் பயங்கரவாத நிதி & போலி நாணயம் (TFFC) பிரிவு ஆகியவற்றை அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    ரிசர்வ் வங்கி

    வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு; ஆர்பிஐ அறிவிப்பு ஆர்பிஐ
    தொடர் சரிவிற்கு பிறகு இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு; ஆர்பிஐ தகவல் இந்தியா
    ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்; யார் அவர்? ஆர்பிஐ
    ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல்

    ஆர்பிஐ

    ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி ரிசர்வ் வங்கி
    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $656.58 பில்லியனாக குறைந்தது இந்தியா
    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-இன் பதவிக்கு ஆபத்தா? ரிசர்வ் வங்கி
    ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை; ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025