NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்
    இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்

    இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 23, 2023
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் நிலையி்ல், இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான கால அவகாசம் நிறைவடையவிருக்கிறது. மேலும், பல புதிய விதிமுறைகளும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து அமலாகவிருக்கின்றன.

    அப்படி, கால அவகாசம் முடியும் திட்டங்கள் மற்றும் அமலாகவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்த பட்டியல் இது.

    டிசிஎஸ் (TCS) விதிமுறை:

    Tax Collection at Source (TCS) வரிவிதிப்பு விதிமுறையானது இந்த அக்டோபர் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. அதன் படி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெட்டி கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20% வரி செலுத்த நேரிடும்.

    நிதி

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம்: 

    இந்த செப்டம்பர் 30ம் தேதியுடன், இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதன் பிறக, 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளே ஏற்க மறுக்கலாம். ஆனால், 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து மட்டுமே திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் அவசியம்:

    பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், சுகன்யா ஸ்மிரித யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் பணத்தை சேமித்து வருபவர்கள், இந்த மாத இறுதிக்குள், அத்திட்டங்களுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், அந்த சேமிப்புக் கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    நிதி

    மியூச்சுவல் ஃபண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் பெயர் அவசியம்: 

    இந்த செப்டம்பர் 30ம் தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் ஒருவரின் பெயரை குறிப்பிடுவது அவசியம். இல்லையென்றால், குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டில் இருந்து நம்முடைய முதலீட்டுப் பணத்தை எடுக்க முடியாமல் தடை செய்யப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம்:

    இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேர்வதற்கு பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    இந்தியா

    அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்
    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை  நாடாளுமன்றம்
    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா  கனடா
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025