Page Loader
எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்
இந்த மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது

எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்

எழுதியவர் Venkatalakshmi V
May 17, 2024
11:50 am

செய்தி முன்னோட்டம்

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்குப் பிறகு, எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது. நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையானது, இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடுக்கானப் பரிசோதனையை தொடங்கியுள்ளது என்று ANI தெரிவித்துள்ளது. "எவரெஸ்ட் மற்றும் எம்.டி.ஹெச் பிராண்ட் மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது... சந்தையில் அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளோம். மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் தடயங்கள் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இது வந்துள்ளது" என்று நேபாள உணவு தொழில்நுட்பத்தின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் கூறினார்.

தர சோதனை

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் இந்தியா மசாலா பொருட்கள்

இந்தியாவில் MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவை பல தசாப்தங்களாக பரவலாக பல வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் பொருளாகும். மேலும் அவற்றின் மசாலாப் பொருட்கள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. MDH மற்றும் எவரெஸ்டின் மசாலாப் பொருட்கள் நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில், ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு அமைப்பு இரண்டு பிராண்டுகளின் நான்கு மசாலாப் பொருட்களைத் தடை செய்தது. சில நாட்களுக்குப் பிறகு, சிங்கப்பூரின் உணவு நிறுவனம் (SFA) எவரெஸ்டின் மீன் கறி மசாலாவை எத்திலீன் ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியதால் திரும்பப் பெற்றது.