NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்
    இந்த மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது

    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 17, 2024
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்குப் பிறகு, எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது.

    நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையானது, இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடுக்கானப் பரிசோதனையை தொடங்கியுள்ளது என்று ANI தெரிவித்துள்ளது.

    "எவரெஸ்ட் மற்றும் எம்.டி.ஹெச் பிராண்ட் மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது... சந்தையில் அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளோம். மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் தடயங்கள் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இது வந்துள்ளது" என்று நேபாள உணவு தொழில்நுட்பத்தின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் கூறினார்.

    தர சோதனை

    ஆய்வுக்கு உட்படுத்தப்படும் இந்தியா மசாலா பொருட்கள்

    இந்தியாவில் MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவை பல தசாப்தங்களாக பரவலாக பல வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் பொருளாகும்.

    மேலும் அவற்றின் மசாலாப் பொருட்கள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    MDH மற்றும் எவரெஸ்டின் மசாலாப் பொருட்கள் நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஏப்ரல் மாதத்தில், ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு அமைப்பு இரண்டு பிராண்டுகளின் நான்கு மசாலாப் பொருட்களைத் தடை செய்தது.

    சில நாட்களுக்குப் பிறகு, சிங்கப்பூரின் உணவு நிறுவனம் (SFA) எவரெஸ்டின் மீன் கறி மசாலாவை எத்திலீன் ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியதால் திரும்பப் பெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025