LOADING...
மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 02, 2026
02:06 pm

செய்தி முன்னோட்டம்

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் செங்குத்தான வீழ்ச்சியுடன் தொடங்கின. பகல் 12:46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,579 புள்ளிகள் (1.94%) சரிந்து 79,707 என்ற அளவிலும், நிஃப்டி 479 புள்ளிகள் (1.9%) சரிந்து 24,699 என்ற அளவிலும் வர்த்தகமானது. ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் வியூக நிபுணர் வி.கே.விஜயகுமார் கூறுகையில், "இக்கட்டான சூழலில் பதற்றமடைந்து பங்குகளை விற்பது தவறான முடிவாகும். கடந்த காலங்களில் கோவிட், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற சமயங்களில் சரிந்த சந்தை, சில மாதங்களில் மீண்டும் மீண்டு வந்துள்ளது. எனவே, தரமான பங்குகளைச் சிறுகச் சிறுகச் சேர்ப்பதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்தலாம்" என்று தெரிவித்துள்ளார்.

காரணங்கள்

சந்தை வீழ்ச்சிக்கு 5 முக்கிய காரணங்கள்

1. புவிசார் அரசியல் பதற்றம்: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் போரைத் தீவிரப்படுத்தியுள்ளன. 2. கச்சா எண்ணெய் விலை உயர்வு: ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7% உயர்ந்து ஒரு பேரல் 82.40 டாலராக அதிகரித்துள்ளது. 3. ரூபாய் மதிப்பு சரிவு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது. 4. பங்குகள் வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட், டயர், விமானப் போக்குவரத்து மற்றும் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. 5. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்

Advertisement