Page Loader
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.37,600 கோடி! கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு உயர்வு
இந்த அளவு அதிகரிப்பு, 2021-க்குப்பிறகு முதன்முறையாக நடைபெறுகிறது.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.37,600 கோடி! கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 20, 2025
12:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியர்களின் பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி (Swiss National Bank) வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023-ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.37,600 கோடி (4.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்) ஆக பதிவாகியுள்ளது.

இது 2022-ஆம் ஆண்டின் கணக்குகளுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

அந்த தொகையில் பெரும்பான்மையானது இந்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பங்குதான்.

தனிநபர் டெபாசிட்கள் மொத்தத்தில் 11% மட்டுமே ஆகும் - அதாவது சுமார் ரூ.3,675 கோடி.

இது "பிளாக் மணி" எனப் பழைய யூகங்களை விட அதிகமாக நிர்வாகத் தேவைகளுக்கான நிதி திரட்டல் எனவே கருதப்படுகிறது.

அதிகரிப்பு

2006-க்கு பின் மிகப்பெரிய உயர்வு

இந்த அளவு அதிகரிப்பு, 2021-க்குப்பிறகு முதன்முறையாக நடைபெறுகிறது.

கடந்த 2006-ஆம் ஆண்டு, இந்தியர்களின் டெபாசிட்கள் 6.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் எனும் உச்சத்தைத் தொட்டதைக்காணலாம்.

அதன் பிறகு தொடர்ச்சியாக சரிவடைந்தாலும், 2011, 2017, 2020, 2022 மற்றும் தற்போது 2023 ஆகிய ஆண்டுகளில் மட்டும் சிறு ஏற்றங்கள் பதிவாகியுள்ளன.

சுவிஸ் வங்கிகளில் இந்திய பணம் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர்:

வெளிநாட்டு முதலீடுகள்

சர்வதேச வர்த்தக சேவைகள்

வங்கிகளின் நிர்வாக நிதிகள்

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு செயல்பாடுகள் இந்த புள்ளிவிவரங்கள், சுவிஸ் தேசிய வங்கியின் வருடாந்திர புலனாய்வு அறிக்கையின் ஒரு பகுதியாக வெளியாகியுள்ளது.

இவை துல்லியமான கணக்குகள் மட்டும் அல்ல; சேமிப்பு, கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி ஓட்டங்களை உள்ளடக்கியவை.