NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி 
    ரிலையன்ஸின் வருடாந்திர பொது கூட்டம்(AGM) 2023 இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.

    'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 28, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு உதவும் வகையில், இந்தியா சார்ந்த AI மாடல்கள் மற்றும் AI-யால் இயங்கும் டொமைன்களை உருவாக்க ஜியோ நிருவனம் ஆர்வமாக இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இன்று தெரிவித்தார்.

    மேலும், 'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி' என்ற மிகப்பெரும் வாக்குறுதியையும் அவர் வழங்கியுள்ளார்.

    ஜியோவின் அடுத்த கட்ட வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவை(AI) முன்னிறுத்தி செல்வதில் அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸின் வருடாந்திர பொது கூட்டம்(AGM) 2023 இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.

    அப்போது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உரையாற்றி முகேஷ் அம்பானி, இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

    டிஜின்

    ரிலையன்ஸின் வருடாந்திர பொது கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

    உலகளாவிய AI புரட்சியானது உலகை மறுவடிவமைத்து வருகிறது.

    அறிவார்ந்த பயன்பாடுகள், தொழில்கள், பொருளாதாரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கூட எதிர்பார்த்ததை விட மிக விரைவில் இந்த AI புரட்சி மாற்றியமைக்கும்.

    உலக போட்டியாளர்களுக்கு மத்தியில் இந்தியாவை சமமாக நிறுத்த, புதுமை, வளர்ச்சி மற்றும் தேசிய செழிப்புக்கு இந்தியா AI ஐப் பயன்படுத்த தொடங்க வேண்டும்.

    நம் நாட்டு மக்களுக்கு நான் இப்போது ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என்று ஜியோ உறுதியளித்தது. நாங்கள் அதை செய்து காட்டினோம். இன்று அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி வழங்கப்படும் என்று ஜியோ உறுதியளிக்கிறது. அதையும் நாங்கள் செய்து காட்டுவோம். என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! குளிர்கால பராமரிப்பு
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்

    இந்தியா

    'நிலவில் இந்தியா': மாறி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய தலைவர்கள் இஸ்ரோ
    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  வெளியுறவுத்துறை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 24 தங்கம் வெள்ளி விலை
    சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025