Page Loader
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு
தங்கம், வெள்ளி விலைகள் இன்றும் (அக்.19) கடும் உயர்வு

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2024
11:08 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்று (அக்டோபர் 19), ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்து, மக்களுக்கு சுமையை அதிகரித்துள்ளது. சென்னையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ₹7,280 ஆகவும், ஒரு சவரன் ₹58,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ஒரு சவரன் ₹320 உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் 10 அன்று ₹56,200 ஆக இருந்த விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது சுமார் ₹2,000 அளவிற்கு அதிகரித்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ₹7,735 ஆகவும், எட்டு கிராம் ₹61,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி

வெள்ளி விலையும் அதிகரிப்பு

இந்தியா முழுவதும் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் தங்கம் விலை அதிகரிப்பு காணப்படுகிறது. இதற்கிடையே, வெள்ளி விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் விலை ₹107 ஆகவும், ஒரு கிலோ ₹1,07,000 ஆகவும் இருந்தது. ஒரு கிலோவின் விலை முந்தைய நாளை விட ₹2,000 அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கடந்த பத்து நாட்களில் படிப்படியாக உயர்ந்து, அக்டோபர் 10 அன்று ₹1,00,000 ஆக இருந்து, இன்று ₹1,07,000 ஆக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மதிப்பு மிக்க நகைகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு சவாலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.