NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ₹5 லட்சமாக உயர்த்த முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ₹5 லட்சமாக உயர்த்த முடிவு
    EPFO தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு

    EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ₹5 லட்சமாக உயர்த்த முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 31, 2025
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசு தானியங்கி வருங்கால வைப்பு நிதி (PF) திரும்பப் பெறும் வரம்பை ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது ஊழியர்களுக்கான அணுகலை கணிசமாக எளிதாக்குகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் 7.5 கோடி உறுப்பினர்களுக்கு பணம் எடுக்கும் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ஸ்ரீநகரில் நடந்த EPFO ​​நிர்வாகக் குழு கூட்டத்தின் போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா இந்த திட்டத்தை அங்கீகரித்தார்.

    மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) இறுதி ஒப்புதல் நிலுவையில் உள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், EPFO ​​உறுப்பினர்கள் மனித தலையீடு இல்லாமல் தானாகவே ₹5 லட்சம் வரை எடுக்க முடியும்.

    தானியங்கி நடைமுறை

    தானியங்கி செட்டில்மென்ட் நடைமுறை

    மருத்துவ அவசரநிலைகளுக்காக ஏப்ரல் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி செட்டில்மென்ட் முறை பின்னர் கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.

    இதற்கான வரம்பு முன்பு மே 2024இல் ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது, ​​95% PF கோரிக்கைகள் மூன்று நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, பணம் ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இது முந்தைய 10 நாள் காலக்கெடுவிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை சரிபார்ப்பு படிகள் 27 இல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன, மேலும் குறைப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

    கூடுதலாக, நிராகரிப்பு விகிதம் கடந்த ஆண்டு 50% இலிருந்து 30% ஆகக் குறைந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த ஆண்டின் நடுப்பகுதியில் யுபிஐ மற்றும் ஏடிஎம்கள் மூலம் PF பணத்தை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் EPFO திட்டமிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வருங்கால வைப்பு நிதி
    மத்திய அரசு
    வணிக புதுப்பிப்பு
    வணிக செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வருங்கால வைப்பு நிதி

    புதிய EPFO ​​விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது: என்ன மாறிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நிதி மேலாண்மை
    ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி; இபிஎஃப்ஓ 3.0 விரைவில் அறிமுகம் என தகவல் ஓய்வூதியம்
    2025 முதல் ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்; மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு வணிக செய்தி
     பிஎஃப் சந்தாதாரர்களுக்கு; இ-வாலட்களிலும் உடனடியாக பிஎஃப் பணத்தை பெறும் வசதி 2025இல் அறிமுகம் வணிக செய்தி

    மத்திய அரசு

    வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை ரிசர்வ் வங்கி
    பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி 5-6 மாதங்களில் கிடைக்கும்: மத்திய அமைச்சர்  புற்றுநோய்
    கூகிள் குரோமுக்கு அதிக ஆபத்து இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை; என்ன செய்யவேண்டும்?  கூகிள் தேடல்
    இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் நீட்டிப்பு பொருளாதாரம்

    வணிக புதுப்பிப்பு

    நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மீது கட்டுப்பாடுகளை விதித்தது ஆர்பிஐ; வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கி
    நவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார் சச்சின் பன்சால் வணிக செய்தி
    2007க்கு பிறகு முதல்முறையாக நடப்பு நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில் லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல்
    டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்புகள் டொனால்ட் டிரம்ப்

    வணிக செய்தி

    பிரிட்டிஷ் காப்பீட்டு நிறுவனத்தின் இந்தியா பிரிவிற்கு 7.5 மில்லியன் டாலர் அபராதம்; பின்னணி என்ன? காப்பீட்டு நிறுவனம்
    வணிகர்களுக்கு உதவும் Zomatoவின் புதிய AI சப்போர்ட் பிளாட்ஃபோர்ம் சோமாட்டோ
    இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத நிறுவனங்களில் ஜோஹோ, ஜெரோதா: அறிக்கை வணிகம்
    கூகுள் பே மூலம் பில் செலுத்துபவர்களுக்கு சேவைக் கட்டணம் விதிப்பு; கிரெடிட்/டெபிட் கார்டு பயனர்களுக்கு மட்டும் கூகுள் பே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025