
பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று முதல் ATM கட்டணம் உயர்வு!
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி, ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய கட்டண விதிகள் இன்று (மே 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
புதிய நடைமுறையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி ATM-இல் பணம் எடுப்பதில் மெட்ரோ நகரங்களில் 5 முறைகள் மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் 3 முறைகள் வரை இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம்.
இதைத்தாண்டி ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், ரொக்கம் அல்லாத ஏ.டி.எம். சேவைகளான பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.6-லிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணங்களை மீள்பரிசீலனை செய்து உயர்த்த அனுமதி அளித்த ரிசர்வ் வங்கியின் முடிவைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NEWSUPDATE || ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டண உயர்வு அமல் | #ATM | #Money | #Transaction | #PolimerNews pic.twitter.com/lyBli36IIt
— Polimer News (@polimernews) May 1, 2025