
அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.
தனது நிறுவனத்திற்கு வந்த நிதியை வேறு பணிகளுக்காக தவறாக மாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் விதித்துள்ளதுடன், பட்டியலிடப்பட்ட நிறுவனத்திலோ அல்லது ரிலையன்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு இடைத்தரகரிலோ இயக்குநராக அல்லது முக்கிய மேலாளர் பணியாளர் (கேஎம்பி) உட்பட பத்திரச் சந்தையுடன் தொடர்புடைய பொறுப்புகளில் பணியாற்றவும் செபி தடை விதித்துள்ளது.
தடை
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கும் அபராதம்
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் செக்யூரிட்டீஸையும் மார்க்கெட்டில் இருந்து ஆறு மாதங்கள் விலக்கி வைத்துள்ள செபி, அந்த நிறுவனத்திற்கும் ₹6 லட்சம் அபராதம் விதித்தது.
செபி தனது 222-பக்க இறுதி உத்தரவில், அனில் அம்பானி, நிறுவனத்தின் முக்கிய நிர்வாகப் பணியாளர்களின் உதவியுடன், நிறுவனத்திலிருந்து நிதிகளைப் பறிக்கும் ஒரு மோசடித் திட்டத்தைத் திட்டமிட்டு, தன்னுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுத்ததாகக் கூறியது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெடின் முன்னாள் முக்கிய அதிகாரிகளான அமித் பாப்னாவுக்கு ₹27 கோடியும், ரவீந்திர சுதால்கருக்கு ₹26 கோடியும் மற்றும் பிங்கேஷ் ஆர் ஷாவுக்கு ₹21 கோடியும் அபராதம் விதித்தது.
மேலும், அனில் அம்பானியின் கீழ் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல துணை நிறுவனங்களுக்கும் தலா ₹25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
செபி உத்தரவு
SEBI bans Industrialist Anil Ambani, 24 other entities, including former officials of Reliance Home Finance from the securities market for 5 years for diversion of funds, imposes fine of Rs 25 cr on Anil Ambani pic.twitter.com/XYXk21pqz2
— ANI (@ANI) August 23, 2024