NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு
    அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை

    அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 23, 2024
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.

    தனது நிறுவனத்திற்கு வந்த நிதியை வேறு பணிகளுக்காக தவறாக மாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் விதித்துள்ளதுடன், பட்டியலிடப்பட்ட நிறுவனத்திலோ அல்லது ரிலையன்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு இடைத்தரகரிலோ இயக்குநராக அல்லது முக்கிய மேலாளர் பணியாளர் (கேஎம்பி) உட்பட பத்திரச் சந்தையுடன் தொடர்புடைய பொறுப்புகளில் பணியாற்றவும் செபி தடை விதித்துள்ளது.

    தடை

    ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கும் அபராதம்

    ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் செக்யூரிட்டீஸையும் மார்க்கெட்டில் இருந்து ஆறு மாதங்கள் விலக்கி வைத்துள்ள செபி, அந்த நிறுவனத்திற்கும் ₹6 லட்சம் அபராதம் விதித்தது.

    செபி தனது 222-பக்க இறுதி உத்தரவில், அனில் அம்பானி, நிறுவனத்தின் முக்கிய நிர்வாகப் பணியாளர்களின் உதவியுடன், நிறுவனத்திலிருந்து நிதிகளைப் பறிக்கும் ஒரு மோசடித் திட்டத்தைத் திட்டமிட்டு, தன்னுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுத்ததாகக் கூறியது.

    ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெடின் முன்னாள் முக்கிய அதிகாரிகளான அமித் பாப்னாவுக்கு ₹27 கோடியும், ரவீந்திர சுதால்கருக்கு ₹26 கோடியும் மற்றும் பிங்கேஷ் ஆர் ஷாவுக்கு ₹21 கோடியும் அபராதம் விதித்தது.

    மேலும், அனில் அம்பானியின் கீழ் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல துணை நிறுவனங்களுக்கும் தலா ₹25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    செபி உத்தரவு

    SEBI bans Industrialist Anil Ambani, 24 other entities, including former officials of Reliance Home Finance from the securities market for 5 years for diversion of funds, imposes fine of Rs 25 cr on Anil Ambani pic.twitter.com/XYXk21pqz2

    — ANI (@ANI) August 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்
    வர்த்தகம்
    செபி
    பங்குச் சந்தை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! குளிர்கால பராமரிப்பு
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்

    வர்த்தகம்

    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா
    ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன் தமிழ்நாடு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா

    செபி

    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? இந்தியா
    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு  அதானி
    செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO  பங்குச் சந்தை
    ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி விதிகள்

    பங்குச் சந்தை

    ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி வணிகம்
    அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்? வணிகம்
    3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை இந்தியா
    பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY பங்குச்சந்தை செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025