NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்
    இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்
    வணிகம்

    இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 12, 2023 | 10:49 am 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்
    இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்

    அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கேகேஆர் (KKR), இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனத்தில் ரூ.2,069.50 கோடியை முதலீடு செய்யவிருக்கிறது. முன்னதாக, 2020ம் ஆண்டே ரூ.4.21 லட்சம் கோடி என்ற முன்பண பங்கு மதிப்பீட்டில், ரூ.5,550 கோடியை RRVL நிறுவனத்தில் அந்நிறுவனம் முதலீட்டு செய்திருக்கிறது. தற்போது ரூ.8.361 லட்சம் கோடி என்ற முன்பண பங்கு மதிப்பீட்டில் ரூ.2069.50 கோடியை முதலீடு செய்வதன் மூலம், RRVL நிறுவனத்தில் தங்களுடைய பங்குகளின் அளவை 1.42 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது கேகேஆர். தற்போது RRVL நிறுனத்தின் இயக்குநராக, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியே பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    KKR-ன் கூடுதல் முதலீடு: 

    RRVL நிறுவனத்தில் KKRன் முதலீடு குறித்து, "எங்களுடைய முதலீட்டாளரான KKR-டமிருந்து தொடர்ந்து ஆதரவைப் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. RRVL-ல் KKR-ன் இந்தக் கூடுதல் முதலீடானது இரு நிறுவனங்களுக்கிடையேயான உறவை பலப்படுத்தியிருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து இந்த நல்லுறவைப் பேன விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய முதலீடை மேற்கொள்வது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் KKR நிறுவனத்தின் துணை சிஇஓவான ஜோ பேயும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்களுடைய துணை நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மூலமாக, மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஃபார்மா எனப் பல்வேறு துறைகளில் 18,500-க்கும் மேற்பட்ட சில்லறை வணிக கடைகளை இயக்கி வருகிறது RRVL.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வணிகம்
    இந்தியா
    முதலீடு

    வணிகம்

    உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! ஜி20 மாநாடு
    3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை இந்தியா
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா இந்தியா
    நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்? இந்தியா

    இந்தியா

    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி  கேரளா
    சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி  அண்ணாமலை
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி ஆசிய கோப்பை

    முதலீடு

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி? சந்திரயான் 3
    தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? இந்தியா
    இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் முதலீட்டு குறிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023