Page Loader
எஸ்யூவி கார்களுக்கு டிமாண்ட் அதிகரிப்பு; புதுப்புது மாடல்களை களமிறக்க தயாராகும் நிறுவனங்கள்
புதுப்புது மாடல்களை களமிறக்க தயாராகும் நிறுவனங்கள்

எஸ்யூவி கார்களுக்கு டிமாண்ட் அதிகரிப்பு; புதுப்புது மாடல்களை களமிறக்க தயாராகும் நிறுவனங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 13, 2023
03:46 pm

செய்தி முன்னோட்டம்

மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா தார் (3-கதவு), மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா போன்ற மாடல்களுடன் இந்தியாவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், விஷயம் இத்துடன் முடிவடையவில்லை. ஏனெனில் பல புதிய போட்டியாளர்கள் ஆஃப்-ரோட் எஸ்யூவி கோதாவில் குதிக்க தயாராகி வருகின்றனர். அதன்படி, 5-கதவு கொண்ட மஹிந்திரா தார் அதன் 3-கதவு கொண்ட முந்தைய மாடலை விட மிகவும் ஆடம்பரமான அனுபவத்தை வழங்கும். இது 2024ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வர உள்ளது. இது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க கிரில், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், மின்சாரத்தில் சரிசெய்யக்கூடிய ஒற்றை-பேன் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை மற்றும் புதுப்பிக்கப்பட்ட அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Automobile Companies to introduce more suvs in india

ஃபோர்ஸ் குர்கா, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர்

5 கதவு கொண்ட ஃபோர்ஸ் குர்கா வரவிருக்கும் மாதங்களில் அதன் இந்திய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. பெரிய பரிமாணங்கள் மற்றும் கூடுதல் கதவுகளுடன், அதிக கேபின் இடம், பல்துறை இருக்கை கட்டமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நுழைவு/வெளியேற்றம் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. மேலும், அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், எம்ஜி குளோஸ்டர் மாடலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வர உள்ளது. தவிர 2025இல் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் 5 மற்றும் 7 இருக்கை அமைப்புகளில் அறிமுகமாக உள்ளது. பொலேரோ மேம்படுத்தப்பட்டு 2026 ஆம் ஆண்டிலும், டாடா சியாரா 2025ஆம் ஆண்டிலும் களமிறங்க உள்ளது.