NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனவரி 10  வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை
    பாம்பன் பலம்

    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 31, 2022
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜனவரி 10 -ம் தேதி வரை, பாம்பன் பாலத்தில், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

    பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின், ரயில்வே பொறியாளர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே பாலத்தில் ரயில்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 23ல், சீரமைப்பு பணி துவங்கியதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் தீவுப் பகுதியை, மண்டபம் நிலப்பரப்புடன் இணைப்பதற்காக கட்டப்பட்டது.

    மேலும் படிக்க

    பாம்பன் பலம் மற்றும் ரயில் போக்குவரத்து

    இந்த தடை காரணமாக, மதுரை, திருச்சியில் இருந்து வந்த பயணிகள் ரயில்கள், ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டதோடு, சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும், மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேஸ்வரத்தில் இருந்து ரயில்கள் புறப்பட அனுமதி இல்லை என செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

    எனினும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதிய பாலம் கட்டும் பணியும் விரைவாக நடைபெற்று வருவதாகவும், அந்த பால வேலைகள் பற்றிய வீடியோ ஒன்றை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில், தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இந்த புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான தொகை ரூ.540 கோடி என்றும் கூறப்படுகிறது. பாலத்தின் கட்டுமானம், பிப்ரவரி 2020 இல் தொடங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025