NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது
    ரயில் மெயில் சேவை உங்கள் வாசலில்

    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 19, 2022
    11:49 am

    செய்தி முன்னோட்டம்

    பொதுவாக நாம் ரயில் சேவை மூலம் சரக்குகள் அனுப்ப, அந்த ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனிற்கு நேரில் சென்று பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

    அதேபோல், நமக்கு அனுப்பப்படும் சரக்குகளை, நேரில் சென்று, கையெழுத்து இட்டு, தான் வாங்கி வர வேண்டும்.

    வெளியூர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களும், கூரியர்களும் தபால்துறை மூலமும் அனுப்பலாம். வெளி மாநிலங்களுக்கு செல்பவை ரயில் மெயில் மூலம் அனுப்பப்படுகின்றன.

    இப்போது ரயில் துறையும், இந்தியா போஸ்ட்டும் கை கோர்த்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்தியா போஸ்ட், வாடிக்கையாளர்களிடமிருந்து, சரக்குகளைப் பெற்று ரயில் மூலம் அனுப்பும். அந்த பார்சல் இலக்கை அடைந்தபின், அதை ரயில் நிலையத்தில் இருந்து பெற்று, சேர்ப்பிக்க வேண்டிய வாடிக்கையாளரிடம் தானே சேர்க்கிறார்கள்.

    மேலும் படிக்க

    ரயில் மெயில் மற்றும் இந்திய அஞ்சல் சேவை

    இத்தகைய சேவை ஏற்கனவே, சூரத் - வாரணாசி இடையே செயல்படும் தப்தி கங்கா எஸ்பிரஸில் நடைமுறையில் உள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல், இத்திட்டம், சென்னை, மதுரை மற்றும் கோவை கோட்டத்தில் நடைமுறை படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதற்காக, 16 கலெக்ஷன் பாய்ண்ட்கள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளன எனவும், அங்கு ஒரு சேவை நிலையம் அமையவுள்ளதாகவும், மக்கள் தங்கள் அருகாமையில் அமைய பெற்றிருக்கும் சேவை நிலையத்தை தேர்வு செய்ய ஒரு செயலியையும் விரைவில் அறிமுகப்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த நிலையத்தில் செயல்படும் தபால் துறை அலுவலர்கள், பார்சல்களை ஸ்கேன் செய்து, பொருட்களின் தன்மையை உறுதிப்படுத்தும் ஆவணம் ஒன்றை வழங்குவர். பேக்கேஜிங்கிற்கான விலை Rs.6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதோடு GST வரியும் கூடுதலாக பெறப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    பயனர் பாதுகாப்பு

    சமீபத்திய

    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்
    செவ்வாய் கிரகத்திலிருந்து பால்வீதி வரை—ஜூன் மாதத்தில் வானத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை காண நாசாவின் டிப்ஸ் நாசா

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025