NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது
    ஆட்டோ

    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது

    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 19, 2022, 11:49 am 1 நிமிட வாசிப்பு
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது
    ரயில் மெயில் சேவை உங்கள் வாசலில்

    பொதுவாக நாம் ரயில் சேவை மூலம் சரக்குகள் அனுப்ப, அந்த ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனிற்கு நேரில் சென்று பதிவு செய்து அனுப்ப வேண்டும். அதேபோல், நமக்கு அனுப்பப்படும் சரக்குகளை, நேரில் சென்று, கையெழுத்து இட்டு, தான் வாங்கி வர வேண்டும். வெளியூர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களும், கூரியர்களும் தபால்துறை மூலமும் அனுப்பலாம். வெளி மாநிலங்களுக்கு செல்பவை ரயில் மெயில் மூலம் அனுப்பப்படுகின்றன. இப்போது ரயில் துறையும், இந்தியா போஸ்ட்டும் கை கோர்த்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியா போஸ்ட், வாடிக்கையாளர்களிடமிருந்து, சரக்குகளைப் பெற்று ரயில் மூலம் அனுப்பும். அந்த பார்சல் இலக்கை அடைந்தபின், அதை ரயில் நிலையத்தில் இருந்து பெற்று, சேர்ப்பிக்க வேண்டிய வாடிக்கையாளரிடம் தானே சேர்க்கிறார்கள்.

    ரயில் மெயில் மற்றும் இந்திய அஞ்சல் சேவை

    இத்தகைய சேவை ஏற்கனவே, சூரத் - வாரணாசி இடையே செயல்படும் தப்தி கங்கா எஸ்பிரஸில் நடைமுறையில் உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல், இத்திட்டம், சென்னை, மதுரை மற்றும் கோவை கோட்டத்தில் நடைமுறை படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக, 16 கலெக்ஷன் பாய்ண்ட்கள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளன எனவும், அங்கு ஒரு சேவை நிலையம் அமையவுள்ளதாகவும், மக்கள் தங்கள் அருகாமையில் அமைய பெற்றிருக்கும் சேவை நிலையத்தை தேர்வு செய்ய ஒரு செயலியையும் விரைவில் அறிமுகப்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நிலையத்தில் செயல்படும் தபால் துறை அலுவலர்கள், பார்சல்களை ஸ்கேன் செய்து, பொருட்களின் தன்மையை உறுதிப்படுத்தும் ஆவணம் ஒன்றை வழங்குவர். பேக்கேஜிங்கிற்கான விலை Rs.6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதோடு GST வரியும் கூடுதலாக பெறப்படும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    பயனர் பாதுகாப்பு
    ரயில்கள்

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    பயனர் பாதுகாப்பு

    இப்போது இணையம் முடங்கினாலும், கவலை இல்லாமல் வாட்சப் உபயோகிக்கலாம் வாட்ஸ்அப்
    கூகிளில் தேடக்கூடாத விஷயங்கள்; மீறினால், சட்ட சிக்கலில் சிக்குவீர்கள் கூகுள்
    அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் இந்திய ரயில்வே
    ஆபத்தான சாலைகள் குறித்து எச்சரிக்கும் கூகிளின் புதிய செயலி வேஸ் கூகிள் தேடல்

    ரயில்கள்

    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை சென்னை
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? இந்திய ரயில்வே

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023