NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஜனவரி 2025 முதல் கார்களின் விலை உயர்வு; ஹூண்டாயைத் தொடர்ந்து மாருதி சுஸூகியும் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனவரி 2025 முதல் கார்களின் விலை உயர்வு; ஹூண்டாயைத் தொடர்ந்து மாருதி சுஸூகியும் அறிவிப்பு
    ஜனவரி 2025 முதல் கார்களின் விலைகளை உயர்த்துவதாக மாருதி சுஸுகி அறிவிப்பு

    ஜனவரி 2025 முதல் கார்களின் விலை உயர்வு; ஹூண்டாயைத் தொடர்ந்து மாருதி சுஸூகியும் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 06, 2024
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி, ஜனவரி 2025 முதல் அதன் முழு கார் வரம்பிலும் 4% வரை விலை உயர்வை அறிவித்தது.

    அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளைக் காரணம் காட்டி இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும் என்று நிறுவனம் கூறியது.

    இந்த முடிவு இருந்தபோதிலும், மாருதி சுஸூகி தொடர்ந்து வலுவான விற்பனை வளர்ச்சியைக் காட்டுகிறது.

    மொத்த பயணிகள் வாகன விற்பனை நவம்பர் 2023இல் 134,158 யூனிட்டுகளிலிருந்து 2024 நவம்பரில் 141,312 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

    உள்நாட்டு, ஓஇஎம் மற்றும் ஏற்றுமதி பிரிவுகள் உட்பட மொத்த வாகன விற்பனை கடந்த மாதம் 181,531ஐ எட்டியது.

    விலை உயர்வு

    வரிசையாக விலை உயர்வை அறிவித்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    சமீபத்தில் பல்வேறு கார் நிறுவனங்களும் ஜனவரி 2025 முதல் விலை உயர்வை அறிவித்து வருகின்றனர்.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) அதிக உள்ளீடு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் மற்றும் சாதகமற்ற அந்நிய செலாவணி விகிதங்கள் காரணமாக, ஜனவரி 1, 2025 முதல் அதன் மாடல்களில் ₹25,000 வரை விலை உயர்வை அறிவித்தது.

    இதேபோல், ஆடி இந்தியா தனது வரிசையில் 3% விலை உயர்வை டிசம்பர் 2 அன்று அறிவித்தது.

    ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிலையான வளர்ச்சிக்கான திருத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது.

    இதேபோல் பிஎம்டபிள்யூவும் ஜனவரி 2025 முதல் விலை உயர்வை அறிவித்தன. புதிய ஆண்டின் தொடக்கத்தில் விலை திருத்தங்கள் ஒரு தொழில்துறை விதிமுறையாக மாறிவிட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    சுஸூகி
    இந்தியா
    விலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மாருதி

    4 புதிய SUV மாடல்களை களமிறக்க இருக்கும் ஹூண்டாய் ஹூண்டாய்
    மாருதியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க  ஆட்டோமொபைல் நிறுவனமானது டாடா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார்  இந்தியா
    இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் விலை உயர்ந்தது ஆட்டோ

    சுஸூகி

    இந்த செப்டம்பரில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் பைக்குகள் ப்ரீமியம் பைக்
    ஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் நிறுவனத்துடன் பறக்கும் கார்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுஸூகி கார்
    அதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா இந்தியா
    சூரிய சக்தி வாகனங்கள் உற்பத்திக்கு ரூ.450 கோடி முதலீடு செய்ய உள்ளது மாருதி சுஸுகி  மாருதி

    இந்தியா

    ரூ.40,000 விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது ஓலா; சிறப்பம்சங்கள் என்னென்ன? ஓலா
    அரசியலமைப்பு தினம் 2024: பொதுச் சேவையில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி அரசியலமைப்பு தினம்
    அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்; ஆய்வில் தகவல் செயற்கை நுண்ணறிவு
    வார இறுதி நாளில் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தன இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை

    விலை

    உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு  மத்திய அரசு
    சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்  சென்னை
    '3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம்  ஆவின்
    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  எரிவாயு சிலிண்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025