
கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை
செய்தி முன்னோட்டம்
உலக வங்கியின் ஜூன் 2025 உலகளாவிய வறுமை புதுப்பிப்பின்படி, பாகிஸ்தானின் மக்கள்தொகையில் தோராயமாக 44.7% பேர் இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிப்பு, வங்கியின் உலகளாவிய வறுமை வரம்புகளைத் திருத்தியதைத் தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் போன்ற குறைந்த-நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $4.20 என்ற அளவுகோலை வறுமைக்கோடாக உலக வங்கி நிர்ணயித்துள்ளது.
இந்த சரிசெய்தல் உலகளாவிய வாழ்க்கைச் செலவுகள் மற்றும் நுகர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
இந்த புதிய வரம்புகள் வறுமையின் மிகவும் துல்லியமான சர்வதேச ஒப்பீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
விபரங்கள்
விரிவான விபரங்கள்
240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானில், இப்போது ஒரு நாளைக்கு $4.20க்கும் குறைவாக சம்பாதிக்கும் 107.95 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர்.
இதன் மூலம் கிட்டத்தட்ட பாகிஸ்தானில் பாதிக்குப் பாதி மக்கள் வறுமையில் வாழ்வதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
புதிய புள்ளிவிவரங்கள் பாகிஸ்தானியர்களில் 16.5% பேர் ஒரு நாளைக்கு $3 என்ற தீவிர வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். இது இந்தியாவில் வெறும் 5.25% ஆக உள்ளது.
உலக பட்டினிக் குறியீடு உள்ளிட்ட பல தனியார் அமைப்புகள் வெளியிடும் குறியீடுகளில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதாக அவ்வப்போது அறிக்கைகள் வந்தாலும், சர்வதேச அமைப்பான உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியாவை விட பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருப்பதை உறுதி செய்கிறது.