NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதல்: டிரக்கில் இருந்து FBI கண்டுபிடித்தது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதல்: டிரக்கில் இருந்து FBI கண்டுபிடித்தது என்ன?
    அந்த நபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்

    நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதல்: டிரக்கில் இருந்து FBI கண்டுபிடித்தது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 02, 2025
    10:08 am

    செய்தி முன்னோட்டம்

    புத்தாண்டு தினத்தன்று நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் ட்ரக்கை ஒட்டி வந்த நபரின் அடையாளத்தை சட்ட அமலாக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

    எஃப்.பி.ஐ வெளிப்படுத்திய முதற்கட்ட விவரங்கள், 15 பேரைக் கொன்றதற்கும், டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்தியதற்கும் காரணமான ட்ராக் ட்ரைவரின் பெயர் ஷம்சுத் தின் ஜப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    42 வயதான அந்த நபர் முடிந்தவரை பலரைக் கொல்வதாக முடிவெடுத்தே வாகனத்தை ஒட்டி வந்ததாக அதிகாரிகள் முன்பு தெரிவித்துள்ளார்.

    அந்த நபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். எனினும் அவரை பற்றிய அடையாளங்களும், விவரங்களும் விசாரணையில் வெளி வந்துள்ளது.

    விவரங்கள்

    நியூ ஆர்லியன்ஸ் தாக்குதல் நடத்திய ஷம்சுத் தின் ஜப்பார் யார்?

    தி சன் படி, முதற்கட்ட அடையாள அறிக்கையின்படி, ஜப்பார் 42 வயதான அமெரிக்க குடிமகன். டெக்சாஸில் பிறந்து வளர்ந்த இவர், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார்.

    புத்தாண்டு தினத்தன்று அவர் நடத்திய தாக்குதலில் பலர் இறந்த நிலையில், அவரை இடைமறித்த காவல்துறையினரையும் அவர் அவர் தாக்கியதில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த தாக்குதலின் போது இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.

    அவர் ஓட்டிச் சென்ற டிரக்கின் பின்புறத்தில் கருப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி காணப்பட்டதாக NOLA.com செய்தி வெளியிட்டுள்ளது.

    இது சம்பவத்தின் பயங்கரவாத தொடர்புகள் குறித்த சந்தேகங்களை மேலும் தூண்டுகிறது.

    விசாரணை

    வழக்கை கையிலெடுத்த FBI - ட்ராக் ட்ரைவர் தீவிரவாதியா என விசாரித்து வருகிறது

    FBI நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவார்ட்டர்ஸில் புத்தாண்டு தினத் தாக்குதலை விசாரித்து வருகிறது.

    FBI இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதுகிறது மற்றும் ஓட்டுநர் தனியாகச் செயல்படவில்லை என்று நம்புகிறது.

    மேலும் அந்த இடத்தை சல்லடை போட்டதில், பிரெஞ்சு குவார்ட்டர்ஸில் ஓரிரு இடங்களில் வெடிபொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என FBI கூறியது.

    அசோசியேட்டட் பிரஸ் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, லூசியானா மாநில காவல்துறை உளவுத்துறை புல்லட்டின் படி, மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் பல மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களில் ஒன்றை வைப்பதை CCTV காட்சிகள் காட்டியது.

    எனவே இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கக்கூடும் என FBI சந்தேகிக்கிறது.

    கண்டுபிடிப்பு

    அதிகாரிகள் தங்கள் விசாரணையில் கண்டுபிடித்தது என்ன?

    சந்தேக நபரின் ட்ரக் வாகனத்தில் துப்பாக்கிகள் மற்றும் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில காவல்துறை புல்லட்டின் தெரிவித்துள்ளது.

    இந்த பொருட்கள் கூலருக்குள் மறைத்து வைக்கப்பட்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க வசதியாக வயரிங் செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

    அந்த ரிமோட் கூட வாகனத்தில் காணப்பட்டது என்று செய்தியறிக்கை கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதிகள்
    தீவிரவாதம்
    புத்தாண்டு
    புத்தாண்டு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தீவிரவாதிகள்

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல்  மணிப்பூர்
    ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை பாகிஸ்தான்
    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா

    தீவிரவாதம்

    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    சிறிய ஆன்லைன் தளங்களில் தீவிரவாத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய கருவி: கூகுள் கூகுள்
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா

    புத்தாண்டு

    2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள் புத்தாண்டு
    2023 புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை முந்தியது வாரணாசி புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  தமிழக அரசு
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி

    புத்தாண்டு

    'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து  புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி
    ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025