NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா 
    நெருக்கடியைத் தீர்ப்பதற்கு கனடா இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்துள்ளது.

    இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 04, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு இந்தியா கனடாவிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தங்கள் நாடு இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருகிறது என்று கூறியுள்ளார்.

    "நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறோம். கனடிய அதிகாரிகளின் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து இந்தியாவுடன் நாங்கள் பேசுவோம். ஏனெனில் இராஜதந்திர உரையாடல்கள் ரகசியமாக இருப்பது தான் சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று கனேடிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

    ஜகத்சன்

    "இந்தியாவுடன் பொறுப்புடனும் ஆக்கப்பூர்வமாகவும் பேசுவோம்": ஜஸ்டின் ட்ரூடோ

    அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகும் கனேடிய தூதர்கள் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என்று இந்தியா மிரட்டியதாக செய்திகள் கூறுகின்றன.

    மொத்தம் 62 கனட அதிகாரிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களது எண்ணிக்கையை 41ஆக குறைக்க வேண்டும் என்று கனடாவிடம் இந்தியா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இருப்பினும், இந்த அறிக்கைக்கு இந்தியாவும் கனடாவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.

    இதற்கிடையில், இந்தியாவுடனான பிரச்சனையை அதிகரிக்க தனது நாடு விரும்பவில்லை என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தெரிவித்தார்.

    கனடா தொடர்ந்து "இந்தியாவுடன் பொறுப்புடனும் ஆக்கப்பூர்வமாகவும் பேசும்" என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், "கனேடிய குடும்பங்களுக்கு உதவ இந்தியாவில் கனேடிய அரசு இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா
    இந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்  இந்தியா
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா  இந்தியா

    இந்தியா

    ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு அமெரிக்கா
    இந்தியாவின் அசத்தலான விருந்தோம்பலில் திளைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வைரலாகும் காணொளி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    உலகம்

    பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை திருடி கேமராவில் சிக்கிய விமான நிலைய அதிகாரிகள் அமெரிக்கா
    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை  இந்தியா
    இந்தியாவில் எப்போது தொடங்கியது பயங்கரவாதம்: வரலாறு ஒரு பார்வை  இந்தியா
    உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட 15 வயது சிறுவன் - கின்னஸ் சாதனை கின்னஸ் சாதனை

    உலக செய்திகள்

    மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள்  உலகம்
    டென்னிஸில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த 24 வயது இளம் வீரர் மைக்கேல் யெமர்  டென்னிஸ்
    அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர் அமெரிக்கா
    பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிய தடை  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025