NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது
    இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 19, 2024
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று அறிவித்தார்.

    இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    "ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்தியப் பயணத்தின் குறிப்பிட்ட தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும், ரஷ்யா அதற்கான ஆயத்தத்தைத் தொடங்கும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

    "அவரது பயணத்தின் துல்லியமான தேதிகளை விரைவில் உறுதிப்படுத்துவோம் என்று நம்புகிறேன்... நிச்சயமாக, பிரதமர் மோடியின் இரண்டு முறை ரஷ்யாவுக்குப் பிறகு, இப்போது ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை நாங்கள் முடிவெடுத்துளோம். எனவே நாங்கள் அதை எதிர்நோக்குகிறோம். ," என்று அவர் மேலும் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியா வருகிறார்!#SunNews | #VladmirPutin | #India pic.twitter.com/c3C62K4TaF

    — Sun News (@sunnewstamil) November 19, 2024

    சர்வதேச குற்றவாளி

    சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட புடின்

    உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக விளாடிமிர் புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) கைது வாரண்டின் கீழ் உள்ளார்.

    மார்ச் 2023இல், மோதல் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, புடின் மற்றும் ரஷ்யாவின் குழந்தை உரிமைகளுக்கான ஆணையரான மரியா லவோவா-பெலோவா ஆகிய இருவருக்குமே போர்க் குற்றங்களுக்காக ICC கைது வாரண்ட்களை பிறப்பித்தது.

    ரோம் சட்டத்தின் கீழ், நீதிமன்றத்தின் பிணைப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஐசிசியின் ஏதேனும் ஒரு உறுப்பு நாட்டிற்கு அந்த குற்றவாளி நபர் சென்றால், அவர்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும்.

    இருப்பினும், ரோம் சட்டதிட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை. எனவே, ரஷ்யா அதிபரை இந்தியாவில் வைத்து கைது செய்ய முடியாது.

    நிலைப்பாடு

    ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய இரு நாடுகளுக்கும் ஆதரவாகவே இருந்துள்ளது

    ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில், மாஸ்கோவிற்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து இந்தியா பலமுறை புறக்கணித்துள்ளது.

    கூடுதலாக, அது ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெயை வாங்குகிறது, இது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் எரிச்சலை அதிகரிக்கிறது.

    அதோடு, பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ரஷ்யாவின் கசான் நகருக்குச் சென்றார்.

    உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் இருதரப்பு சந்திப்பை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளாடிமிர் புடின்
    இந்தியா
    ரஷ்யா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விளாடிமிர் புடின்

    பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் இந்தியா
    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் ரஷ்யா
    உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர் கனடா
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்களை காவு வாங்கும் -ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யா

    இந்தியா

    ட்ரூகாலர் நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை வருமான வரி சட்டம்
    அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமா? 1967 தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ரூ.2,153 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம் ஷிவ் நாடார்
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு ரிசர்வ் வங்கி

    ரஷ்யா

    2024 ஒலிம்பிக்ஸிற்கு எதிராக ரஷ்யா AI ஐ மூலம் தவறான தகவல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் ஒலிம்பிக்
    2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள் உலகம்
    24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியாவிற்கு செல்லும் ரஷ்யா அதிபர் புடின் விளாடிமிர் புடின்
    லிமோசைனை ஒட்டிய ரஷ்யா அதிபர் புடினும், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உம்; வைரலாகும் காணொளி கிம் ஜாங் உன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025