NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்! 
    அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்! 
    உலகம்

    அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 02, 2023 | 11:46 am 1 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்! 
    அமெரிக்க கருவூல செயலாளர் ஜானட் யெல்லன்

    கடன் உச்சவரம்பை காங்கிரஸ் உயர்த்தாவிட்டால் விரைவில் அமெரிக்கா விரைவில் நிதிநெருக்கடிக்கு ஆளாகும் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஜானட் யெல்லன். தற்போது அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு 31.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் விரைவில் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஜானட். இதுகுறித்து விவாதிப்பதற்காக மே 9-ம் தேதி தலைவர்கள் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்காவில் 1960 முதல் இதுவரை 78 முறை கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது அல்லது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கடன் உச்சவரம்பு குறித்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றால், சில கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகள்.

    கடன் உச்சவரம்பு: 

    கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டால், அமெரிக்காவால் பிற நாடுகளிடம் இருந்து கூடுதலாகக் கடன் பெற முடியாது. இதனால் அந்நாடு நிதி நெருக்கடிக்க ஆளாக நேரிடும். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவால் ஏற்கனவே வாங்கிய கடனிற்கு வட்டியோ அசலோ செலுத்த முடியாது. இதனால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். "தற்போது கையிருப்பில் இருக்கும் நிதி எப்போது முடியும் எனத் திட்டவட்டமாகக் கூற முடியாது. ஆனால், கடன் உச்சவரம்பை உயர்த்தாத பட்சத்தில் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா நிதிநெருக்கடிக்கு ஆளாகும். கடைசி நேரம் வரை இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இழுத்தடிப்பது மேசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என எச்சரித்திருக்கிறார் ஜானட் யெல்லன்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா

    அமெரிக்கா

    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  இந்தியா
    ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு! ஆப்பிள்
    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC இந்தியா
    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!  நாசா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023