NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு 

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2024
    10:18 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    அதனால், அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளது.

    இதற்கு மத்தியில், தெற்கு காசா நகரமான ரஃபாவில் இராணுவத் தாக்குதலை நடத்த இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஆனால், காசாவில் அமெரிக்கத் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை சரிபார்க்க முடியவில்லை என்று இஸ்ரேல் நிர்வாகம் கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலை, இஸ்ரேல் காசா மீது 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிரது.

    இஸ்ரேல் 

    'இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்தால் பின்விளைவுகள் ஏற்படும்'

    பிப்ரவரி தொடக்கத்தில் அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட புதிய தேசிய பாதுகாப்பு குறிப்பாணையின் கீழ் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும், அந்த அறிக்கையில் இவை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையானது அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

    ரஃபாவில் இஸ்ரேல் இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தால், பின்விளைவுகள் ஏற்படும் என்று வாஷிங்டன் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது.

    அதே அறிக்கையில், சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று இஸ்ரேலிடம் இருந்து நம்பகமானஉறுதிமொழிகளைப் பெற்றதாக பைடன் நிர்வாகம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இஸ்ரேல்

    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை காசா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர்  இந்தியா

    அமெரிக்கா

    பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு  உலகம்
    3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன்  பாகிஸ்தான்
    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு  இந்தியா
    'Incognito' வழக்கைத் தீர்க்க, பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை அழிக்க கூகுள் ஒப்புக்கொண்டது கூகுள்

    உலகம்

    ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு அமெரிக்கா
    1900 இல் பிறந்த உலகின் வயதான மனிதர் தங்கள் நாட்டில் இருப்பதாக பெரு அறிவிப்பு கின்னஸ் சாதனை
    'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு  அமெரிக்கா
    கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்  கனடா

    உலக செய்திகள்

    இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்  இஸ்ரேல்
    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி இந்தியா
    வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு  வியட்நாம்
    ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்  ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025