NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
    ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் வரை H-1B விசா கோரி விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

    எழுதியவர் Srinath r
    Oct 24, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை கருத்தில்கொண்டு, H-1B விசாவில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்த முக்கிய மாற்றங்களை பைடன் அரசு தற்போது முன்மொழிந்துள்ளது.

    அமெரிக்கா செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும், H-1B விசா நீண்ட காலமாக முக்கியமான விசாக உள்ளது.

    ஒருவர் சார்பாக பலமுறை பதிவு செய்ய தடை- தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களில் மிக முக்கியமான மாற்றமாக, ஒரு பணியாளரின் சார்பாக ஒரேமுறை மட்டுமே அவர் பணியாற்றும் நிறுவனத்தால் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

    இதன் மூலம் ஒருவருக்கு விசா கிடைக்கும் வாய்ப்பை, அவர் பணியாற்றும் நிறுவனங்கள் செயற்கையாக அதிகப்படுத்துவதை தடுக்க முடியும்.

    இதற்காக, ஊழியருக்கு விசா ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனங்கள், அவரின் பாஸ்போர்ட்டையும் உடன் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    2nd card

    "முதலாளி-பணியாளர்" உறவு தேவை இல்லை

    கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "முதலாளி- பணியாளர் உறவுமுறை" தற்போது நீக்கப்பட்டுள்ளது.

    முதலில் இருந்த முறைப்படி, ஒரு நிறுவனத்தை நிறுவியவர்கள் அந்த நிறுவனம் சார்பிலே விசா எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

    தற்போது, தொழில்முனைவோர் எளிமையாக விசா எடுக்க இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்முனைவோர், அவர்கள் நிறுவனத்தின் 50% அதிகமான பங்குகளை வைத்திருந்தாலும் கூட H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

    3rd card

    ரிமோட் வேலைவாய்ப்புகளுக்கும் விசா வழங்கப்படும்

    கொரோனா காலத்திற்குப் பின் அதிகரித்து வரும் ரிமோட் வேலை வாய்ப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தற்போது இப்புதிய மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது.

    இதன் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், டெலிவொர்க், ரிமோட் வேலை அல்லது அமெரிக்காவில் உள்ள மற்ற ஆஃப்-சைட் வேலைவாய்ப்புகளின் பணி கடிதத்தின் மூலம் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

    அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) சார்பில், முன்மொழியப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    4th card

    தானியங்கி "கேப்-கேப்" நீட்டிப்பு (Cap-Gap Extension)

    முந்தைய முறையின் கீழ், F-1 விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) அக்டோபர் 1 வரை மட்டுமே நீட்டிக்கப்படும்.

    தற்போது முன்மொழியப்பட்ட விதியின்படி, மாணவர்கள் அதை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அல்லது அவர்களின் H-1B விசாவைப் பெறும் வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை நீட்டிக்கலாம்.

    அதிகப்படுத்தப்படும் ஆய்வுகள்- குறிப்பாக ஐடி உள்ளிட்ட துறைகளில் மோசடிகளை தவிர்க்க, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு, நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    ஆய்வாளர்கள் நிறுவனங்களில் அறிவிக்கப்படாத திடீர் சோதனைகள் நடத்தி, ஊழியர்களிடம் கலந்துரையாடி, அவர்கள் H-1B விசா பெற தகுதியானவர்களா என சோதிப்பார்கள்.

    5th card

    கடுமையாக்கப்பட்ட "சிறப்புத் தொழில்"வரையறை

    மற்றொரு குறிப்பிடப்பட்ட மாற்றமாக சிறப்புத் தொழில் (Specialty Occupation) என்பதின் வரையறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    இப்புதிய விதினியின் படி,தேவையான பட்டப்படிப்பு மற்றும் பணியாற்றும் வேலைக்கு இடையே நேரடி தொடர்பு இருக்க வேண்டும். இந்த முன்மொழிவு திறமையான நபர்களுக்கு விசா மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம்.

    பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் காலம்- முன்மொழிக்கப்பட்ட நடைமுறைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்த முன்மொழிவுகள் குறித்து டிசம்பர் 22ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    அதன்பின் பொதுமக்கள் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு முதல் இந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜோ பைடன்
    குடியரசு தலைவர்
    அமெரிக்கா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஜோ பைடன்

    அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா
    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    வெள்ளை மாளிகையில் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு  அமெரிக்கா

    குடியரசு தலைவர்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு

    அமெரிக்கா

    இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல் இலங்கை
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன் ஜோ பைடன்
    ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: சாட்டிலைட் ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025