NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்
    பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்

    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    10:20 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் ராணுவ தலைமையில் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த அறிக்கை பாகிஸ்தான் தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி ஜெனரல் அசிம் முனீர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    மேலும் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா ஆயுதப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இது உறுதிப்படுத்தப்பட்டால், இந்த முன்னேற்றம் பாகிஸ்தானின் ராணுவத் தலைமைக்குள் ஒரு பெரிய கலகத்தைக் குறிக்கும்.

    பிரச்சினைக்கு மூல காரணம்

    பிரச்சினைக்கு மூல காரணமே அசிம் முனீர் தான்

    இந்தியாவுடனான மோதலுக்கு மூல காரணமே அசிம் முனீர் தான் என்ற கருத்து பாகிஸ்தான் ராணுவத்தினரிடமே அதிகளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும், உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்ட நிலையில், ராணுவ தளபதி வெளியில் தலைகாட்டாமல், தனது குடும்பத்தை மட்டும் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பியதும் அந்நாட்டு ராணுவ வீரர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

    இந்நிலையில்தான், தற்போது ராணுவத்திற்குள் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், தற்போது வரை, கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அல்லது கட்டளையில் ஏதேனும் மாற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கமோ அல்லது அந்நாட்டு ராணுவ ஊடகப் பிரிவோ (ISPR) எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

    கடிதம்

    பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கடிதம்

    இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல்கள், மேஜர்கள் மற்றும் கேப்டன்கள் உட்பட மூத்த மற்றும் நடுத்தர அளவிலான இராணுவ அதிகாரிகள் குழுவால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கையொப்பமிடப்படாத கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

    இந்தக் கடிதம் ஜெனரல் முனீரை ராஜினாமா செய்யக் கோருவதாகவும், அவர் ராணுவத்தை அரசியல்மயமாக்குவதாகவும், ஜனநாயக செயல்முறைகளை நசுக்குவதாகவும், ஊடக சுதந்திரத்தை முடக்குவதாகவும், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை மோசமாக்குவதாகவும் குற்றம் சாட்டுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் இல்லம் அருகே ட்ரோன்கள் தாக்கியதால், பதுங்கு குழிக்குள் சென்று பதுங்கியுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்
    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    பாகிஸ்தான்

    கையிருப்பில் பணம், டார்ச், மருந்துகள்: நாளைய பாதுகாப்பு பயிற்சியில் என்ன அறிவுறுத்தப்படும்? இந்தியா
    'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிப்பு விமான நிலையம்
    பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு பிரதமர் மோடி

    உலகம்

    அமெரிக்காவின் ATF செயல் தலைவர் பதவியிலிருந்து காஷ் படேல் நீக்கம்; புதிய தலைவர் யார்? அமெரிக்கா
    6,000 உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்துவிட்டதாக அறிவித்த டிரம்ப் நிர்வாகம்; காரணம் என்ன? டொனால்ட் டிரம்ப்
    தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய நான்கு இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தது சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர்
    மின்னணு சாதனைகளுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தது டிரம்ப் நிர்வாகம் டொனால்ட் டிரம்ப்

    உலக செய்திகள்

    தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் கட்டாயமாக செய்யவேண்டியவை எவை? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    அமெரிக்கா பின்வாங்கியதைத் தொடர்ந்து பதிலடி வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
    வெளிநாட்டினர் அனைவரும் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்; கெடு விதித்து அமெரிக்கா உத்தரவு அமெரிக்கா
    சீனாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் அமெரிக்க ஆடம்பர பொருட்கள்; ஊடக அறிக்கை வெளியாகி பரபரப்பு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025