NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி 22 ட்ரோன்களை ஏவியது உக்ரைன்; இரண்டு விமான நிலையங்கள் மூடல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி 22 ட்ரோன்களை ஏவியது உக்ரைன்; இரண்டு விமான நிலையங்கள் மூடல்
    ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி 22 ட்ரோன்களை ஏவியது உக்ரைன்

    ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி 22 ட்ரோன்களை ஏவியது உக்ரைன்; இரண்டு விமான நிலையங்கள் மூடல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 10, 2024
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) அதிகாலை ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு குறைந்தது 22 ட்ரோன்களை ஏவியது.

    இதையடுத்து மாசுகோவின் இரண்டு விமான நிலையங்களை ரஷ்யா அரசு தற்காலிகமாக மூடியது.

    மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்கள் மற்றும் டோமோடெடோவோ நகரில் 12 ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.

    "முதற்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகள் விழுந்த இடத்தில் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை" என்று சோபியானின் டெலிகிராமில் கூறினார்.

    ரஷ்யாவின் ஃபெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சியான ரோசாவியாட்சியா டெலிகிராமில், "சிவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டோமோடெடோவோ மற்றும் ஜுகோவோ விமான நிலையங்களின் செயல்பாட்டில் தற்காலிக கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன." எனக் கூறினார்.

    தற்காப்பு பதில்

    ரஷ்ய வான் பாதுகாப்பு பிரிவுகள் 20 ட்ரோன்களை அழித்தன

    முன்னர் செப்டம்பரிலும் இதேபோல் தாக்குதல் நடத்திய நிலையில், அப்போது நடந்த சம்பவத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு பிரிவுகள் 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தற்போது தனித்தனியாக, உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் கலுகா மற்றும் பிரையன்ஸ்க் பகுதிகளில் உள்ள பல குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு ஒரே இரவில் தீ வைத்ததாக பிராந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

    பிரையன்ஸ்க் பகுதியில் 17 ஆளில்லா விமானங்களை அழித்ததாக ரஷ்ய அரசு கூறியது.

    ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு முக்கியமான வசதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்ய பிரதேசத்தில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக உக்ரைன் அடிக்கடி கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஷ்யா

    நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன அமெரிக்கா
    லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா தேர்தல்
    ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம்  பாதுகாப்பு துறை
    அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு அமெரிக்கா

    உக்ரைன்

    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு  உலகம்
    உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா ஐநா சபை
    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை ரஷ்யா
    கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்யா

    உலகம்

    தண்ணீர் நெருக்கடியால் உலக உணவு உற்பத்தியில் 50% ஆபத்து; பகீர் கிளப்பும் அறிக்கை உலக செய்திகள்
    யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் புதிய தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள் ஹமாஸ்
    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் இஸ்ரேல்
    ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த அமெரிக்க அரசின் ரகசிய ஆவணம் கசிவு ஈரான் இஸ்ரேல் போர்

    உலக செய்திகள்

    டால்பின்கள் சுவாசப் பையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்; விஞ்ஞானிகள் அதிர்ச்சி அறிவியல்
    இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ பதவியேற்பு; துணை அதிபராக 37 வயது இளைஞர் பொறுப்பேற்பு இந்தோனேசியா
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு கனடா
    பிரிக்ஸ் அமைப்பால் டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாது; பிரிக்கை உருவாக்கிய பொருளாதார நிபுணர் கருத்து பிரிக்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025