NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து
    இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து

    பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 30, 2025
    02:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதால், பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு இங்கிலாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்தது.

    குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் இந்தியாவை ஆதரிப்பதில் பிரிட்டனின் நிலைப்பாடு குறித்து, பிரிட்டிஷ் சீக்கிய தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குரிந்தர் சிங் ஜோசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அந்நாட்டின் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹமிஷ் பால்கனர் பதிலளித்தார்.

    "ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியது... பிராந்தியத்தில் பதற்றம் நிலவும் நேரத்தில் அமைதியைக் காக்குமாறு அனைத்து தரப்பினரையும், அனைத்து சமூகத் தலைவர்களையும், சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று பால்கனர் கூறினார்.

    பதில்

    இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்

    "இந்த பயங்கரவாதச் செயலைச் செய்தவர்களில் பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய தொடர்புகள்" மற்றும் இங்கிலாந்தில் உள்ள சமூகங்களிடையே பதட்டங்கள் அதிகரிப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் அழுத்தம் கொடுத்த எம்.பி.க்களில் நிழல் வெளியுறவுச் செயலாளர் பிரிதி படேலும் ஒருவர்.

    "குற்றவாளிகள் முறையாக நீதியின் முன் நிறுத்தப்படுவதை நாங்கள் காண விரும்புகிறோம், மேலும் இந்தியா அவ்வாறு செய்வதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்" என்று பால்கனர் கூறினார்.

    காஷ்மீர் மக்களின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, காஷ்மீர் நிலைமைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நீடித்த தீர்வைக் காண வேண்டும் என்ற இங்கிலாந்தின் நீண்டகால நிலைப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஹல்காம்
    இங்கிலாந்து
    இந்தியா
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு பாகிஸ்தான்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி

    இங்கிலாந்து

    குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து யுகே
    பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன  உலகம்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன உலகம்
    2026 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் அறிமுகமாகிறது செல்ஃப் டிரைவிங் கார்கள்  யுகே

    இந்தியா

    "தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர்  பிரதமர் மோடி
    இந்தியாவின் சிந்து நதி ஒப்பந்த இடைநீக்கத்திற்கு பாகிஸ்தான் கண்டனம் பாகிஸ்தான்
    ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 இடங்களில் இடம்பிடித்த ஒரே இந்திய பல்கலைக்கழகம்; அண்ணா பல்கலைக்கழகம் எத்தனையாவது இடம்? பல்கலைக்கழகம்
    பாகிஸ்தான் கடற்படைக்கு செக்; அரபிக் கடலில் எம்ஆர் சாம் ஏவுகணையை வீசி இந்திய கடற்படை சோதனை கடற்படை

    பயங்கரவாதம்

    சிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு அமெரிக்கா
    ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் ராணுவ ஜவானை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம் ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் பலியான பரிதாபம் பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025