NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 06, 2025
    07:34 pm

    செய்தி முன்னோட்டம்

    கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

    இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்து, தூக்கிலிடப்பட்டவர்கள் முகமது ரினாஷ் அரங்கிலோட்டு மற்றும் முரளீதரன் பெரும்தட்டா வலப்பில் என தெரிவித்துள்ளது.

    சட்ட உதவி மற்றும் கருணை மனுக்கள் உள்ளிட்ட ராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் பிப்ரவரி 28, 2025 அன்று இந்திய தூதரகத்திற்குத் தெரிவித்தனர்.

    இறந்தவரின் குடும்பங்களுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டு இறுதிச் சடங்குகளில் பங்கேற்க உதவியதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

    முகமது ரினாஷ் உடல் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் புதைக்கப்பட்டது.

    ஷாஜாதி

    தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ஷாஜாதி

    கூடுதலாக, ஒரு குழந்தையைக் கொன்றதற்காக தண்டனை பெற்ற மற்றொரு இந்தியரான ஷாஜாதி பிப்ரவரி 15 அன்று தூக்கிலிடப்பட்டார்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உச்ச நீதிமன்றமான கேசேஷன் நீதிமன்றம், அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.

    அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது இறுதிச் சடங்கு மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என சில தினங்களுக்கு முன்பு வெளியுறவுத் துறை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பான வழக்கு அவரது பெற்றோரால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வெளியுறவுத் துறை சார்பாகப் பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா மற்றும் வழக்கறிஞர் ஆஷிஷ் தீட்சித் ஆகியோர் இதை உறுதிப்படுத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மரண தண்டனை
    கேரளா
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    மரண தண்டனை

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் கத்தார்
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி ஏமன்

    கேரளா

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நேரில் ஆய்வு செய்ய கேரளாவின் வயநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி வயநாடு
    வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ வயநாடு
    கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கடன்களும் ரத்து; கேரள வங்கி அறிவிப்பு வயநாடு

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஹாலிவுட்
    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி ரிசர்வ் வங்கி
    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா? துபாய்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE வணிகம்
    UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025