NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி 
    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி 
    உலகம்

    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023 | 09:55 am 0 நிமிட வாசிப்பு
    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி 
    இதனால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எர்டோகனின் அதிகாரம் வலுவடையும்.

    துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, தனது இருபது ஆண்டு கால ஆட்சியை மேலும் நீடித்துள்ளார். 69 வயதான அவர், ஒரு தலைமுறைக்குள் துருக்கியின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளித்தவர் ஆவார். அதிக பணவீக்கம் மற்றும் மிகப்பெரும் பூகம்பத்திற்குப் பிறகு நாடு தத்தளித்து வரும் நிலையில், மூன்றாவது தசாப்தத்திற்கு தனது சர்வாதிகார ஆட்சியை அவர் இந்த தேர்தலின் மூலம் நீட்டித்துள்ளார். இதனால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எர்டோகனின் அதிகாரம் வலுவடையும். மேலும், இந்த தேர்தல் முடிவுகள் தலைநகர் அங்காராவுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும். துருக்கி, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களையும் பகிர்ந்து கொண்ட ஒரு நாடாகும்.

    52% வாக்குகளைப் பெற்று எர்டோகன் வெற்றி 

    99% வாக்குப் பெட்டிகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் எர்டோகன் 52% வாக்குகளைப் பெற்றதாகக் காட்டியது, அவரது போட்டியாளரான கெமல் கிலிக்டரோக்லுவுக்கு 48% வாக்குகள் கிடைத்தன. துருக்கியின் தேர்தல் குழுவின் தலைவர் இந்த வெற்றியை உறுதிப்படுத்தினார். நிலுவையில் உள்ள வாக்குகளை கணக்கிட்டாலும், எர்டோகனுக்கு சாதகமாக தான் அமையும் என்று அவர் கூறினார். இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எர்டோகன், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியை தன்னிடம் ஒப்படைத்ததற்காக நாட்டுக்கு நன்றி தெரிவித்தார். "21 ஆண்டுகள் இருந்ததை போல், நாங்கள் உங்கள் நம்பிக்கைக்கு தகுதியானவர்களாக இருப்போம்," என்று அவர் முடிவுகள் வெளிவந்த பிறகு தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்
    உலக செய்திகள்
    துருக்கி

    உலகம்

    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! டாடா
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலக செய்திகள்
    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா

    உலக செய்திகள்

    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே இந்தியா
    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  பாகிஸ்தான்
    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு பிரேசில்

    துருக்கி

    துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    துருக்கி: தன் கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் நன்கொடையாக வழங்கிய நபர் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    இந்திய மீட்பு படைக்கு கைதட்டி தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் துருக்கி மக்கள் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    துருக்கியில் பூகம்பத்திற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின் எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ வைரல் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023