NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
    கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது குறிவைக்கப்பட்ட தாக்குதல்

    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    திருத்தியவர் Sekar Chinnappan
    Jun 02, 2025
    10:05 am

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவு கூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த நபர், கூடியிருந்த கூட்டத்தினர் மீது மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியும், தீப்பந்தங்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினார்.

    இதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர்.

    முகமது சப்ரி சோலிமான் என அடையாளம் காணப்பட்ட தாக்குதல் ஆசாமி, கூட்டத்தைத் தாக்கும் போது "பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கூச்சலிட்டார்.

    அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    கொலராடோவின் போல்டரில், காசாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட ஒரு நடைப்பயணத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடந்தது.

    காஷ் படேல்

    இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என காஷ் படேல் தகவல்

    கொலராடோ சம்பவத்தை இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று எஃப்பிஐ (FBI) இயக்குனர் காஷ் படேல் கூறியுள்ளார்.

    அவர் மேலும், "கொலராடோவின் போல்டரில் நடந்த ஒரு இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம், முழுமையாக விசாரித்து வருகிறோம்.

    எங்கள் ஏஜென்ட்களும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளும் ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அவை வெளியிடப்படும்." என்று சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    வாஷிங்டனில் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்களான யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் ஆகியோரை சிகாகோ நபர் சுட்டுக் கொன்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இஸ்ரேல்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு அமெரிக்கா
    நார்வே செஸ் 2025: கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் டி.குகேஷ் டி.குகேஷ்
    இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார்; தமிழ் திரையுலகம் அதிர்ச்சி இயக்குனர்
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsபிபிகேஎஸ்: இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐபிஎல் 2025

    அமெரிக்கா

    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    இஸ்ரேல்

    ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி; 80 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் ஈரான்
    அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா
    நம்பிக்கையிழந்த காரணத்தால் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து துரத்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பெஞ்சமின் நெதன்யாகு
    காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல் ஐநா சபை

    உலகம்

    உலக நாடுகளின் இராணுவச் செலவு சாதனை அளவை எட்டியுள்ளது: அறிக்கை உலக செய்திகள்
    பாகிஸ்தானில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது அசிம் மாலிக் நியமனம் பாகிஸ்தான்
    ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு ஆஸ்திரேலியா
    வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன? பாகிஸ்தான் ராணுவம்

    உலக செய்திகள்

    முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன? மாலத்தீவு
    அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல் பாகிஸ்தான்
    அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு; உதவிய டிஎன்ஏ தொழில்நுட்பம் அமெரிக்கா
    14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025