செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய பசுமை ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரோலைசர் ஜிகாபேக்டரியை அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) சான்பிரான்சிஸ்கோவில் அவரது முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் ஓமியம் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்னே பாலன்டைன் ஆகியோர் இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்படி ஓமியம் நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தொழிற்சாலை அமைக்கப்படும். இந்த ஆலை 500 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமியம் இன்டர்நேஷனல்
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிறுவனம்
பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான எலக்ட்ரோலைசர் அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள ஓமியம் இன்டர்நேஷனல் மேம்பட்ட புரோட்டான் பரிமாற்ற சவ்வு மின்னாற் பகுப்புகளை வடிவமைத்து, தயாரித்து மற்றும் பயன்படுத்துகிறது.
செங்கல்பட்டில் அமைய உள்ள அதன் ஜிகாஃபாக்டரி, இந்தியாவின் அதன் மூன்றாவது பெரிய உற்பத்தி நிலையமாக இருப்பதோடு, அதன் உலகளாவிய திட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில், ஓமியம் பெங்களூரில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரித்து பசுமை ஹைட்ரஜனை உருவாக்குகிறது.
நிலக்கரி மற்றும் ஆயிலைப் போலல்லாமல், காற்று மாசில்லாத சுத்தமான ஆற்றல் மூலமான பசுமை ஹைட்ரஜன், இந்தியாவின் தூய்மையான ஆற்றல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக அரசு தகவல்
ஓமியம் நிறுவனத்தின்
— TN DIPR (@TNDIPRNEWS) September 1, 2024
புதிய தொழிற்சாலையை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம். ரூ.400 கோடி முதலீடு 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு#CMMKSTALIN | #TNDIPR | #CMStalinInUS |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TRBRajaa@Guidance_TN @OhmiumInc pic.twitter.com/KFZ5wZfacT