
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது
செய்தி முன்னோட்டம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமை "அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக" கைது செய்யப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே, 2023 செப்டம்பரில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்கு சென்றது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், அவர் காவலில் எடுக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. "நாங்கள் அவரை கொழும்பு கோட்டை நீதவான் முன் ஆஜர்படுத்துகிறோம்," என்று அந்த அதிகாரி கூறினார். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அரசு வளங்களைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பயணம்
ரணிலின் சர்ச்சைக்குரிய லண்டன் பயணம்
2023ஆம் ஆண்டு, ஹவானாவில் G77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரணில் விக்ரமசிங்கே, அங்கிருந்து திரும்பியபோது லண்டனில் தங்கினார். இந்தப் பயணத்தின்போது, அவரும், அவரது மனைவி மைத்ரியும், வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்றனர். தனது மனைவி தனது பயணச்செலவுகளை தானே ஏற்றுக்கொண்டதாகவும், தனது பயணத்திற்கு பொது நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறை (CID), விக்ரமசிங்கே அரசாங்க நிதியை ஒரு தனிப்பட்ட வருகைக்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதில் அவரது மெய்க்காப்பாளர்களின் செலவுகளை அரசுப் பணத்தில் ஈடுகட்டியதும் அடங்கும். ஊழல் மற்றும் தவறான நிர்வாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, மீதமுள்ள பதவிக் காலத்திற்கு ஜூலை 2022இல் விக்கிரமசிங்கே அதிபரானார்.