NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி
    கனமழையால் சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2023
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் கொரியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதனால், இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அரசாங்க தரவுகளின்படி, இந்த பயங்கர வெள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், டஜன் கணக்கானவர்களை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

    கனமழையால் சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

    வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வட கியோங்சாங் மாகாணத்தில் மட்டும் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தென் கொரியாவின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

    சவ்ஜ்க்க்

    27,260 வீடுகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது

    ஞாயிற்றுக்கிழமை, சியோங்ஜு நகரின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டது.

    இதுவரை சுமார் 6,100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், 4,200 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கனமழையால் 27,260 வீடுகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நேற்று, 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 200 சாலைகளும் மூடப்பட்டுள்ளது.

    சில புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் தென் கொரியாவின் வழக்கமான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 9 முதல், தென் கொரியாவின் மத்தியப் பகுதிகளில் இருக்கும் கோங்ஜு நகரம் மற்றும் சியோங்யாங் கவுண்டியில் 600மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென் கொரியா
    கனமழை
    வெள்ளம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    தென் கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025