NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம்
    ஜானவி கந்துலா உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்திய நண்பர்கள்

    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 29, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாணவி ஜான்வி மரணத்தை பற்றி கிண்டலடித்த காவலதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா.

    இவர் கடந்த ஜனவரி மாதம், சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது போலீசாரின் ரோந்து வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

    இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த பாடிகேம்-இல் பதிவான ஒரு வீடியோ பெரும் கண்டனத்தை ஈர்த்தது.

    அதில், விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மேலதிகாரி ஒருவர், அந்த பெண் தான் இறந்துவிட்டாளே என்று கிண்டலாக சிரித்தபடி பேசுவது போல இருந்தது அனைவராலும் கண்டிக்கப்பட்டது.

    card 2

    விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட காவல் அதிகாரி

    இது பற்றி பலரும், முறையான விசாரணையும் வேண்டும் எனக்கோரிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சியாட்டில் போலீஸ் அதிகாரி மற்றும் தொழிற்சங்கத் தலைவரான டேனியல் ஆடரர் "நிர்வாக ரீதியாக செயல்படாத பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்று சியாட்டில் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆடரரை ஊதியமின்றி இடைநீக்கம் செய்யுமாறு, போலீஸ் கண்காணிப்புக் குழு தெரிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த இடமாற்றத் தகவல் வந்துள்ளது.

    ஆடரர் எப்போது இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் மீண்டும் பணியமர்த்தப்பட்டார் என்பது குறித்த தகவல் இல்லை.

    விபத்தில் பலியான ஜானவி கந்துலா, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    அமெரிக்கா

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    ஆந்திரா

    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் திருப்பதி
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன் காவல்துறை
    ஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு முதல் அமைச்சர்
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா

    அமெரிக்கா

    டெஸ்லாவின் நிதியில் தனி கண்ணாடி வீட்டைக் கட்டி வருகிறார எலான் மஸ்க்? எலான் மஸ்க்
    செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான  இருதரப்பு சந்திப்பு இந்தியா
    ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு  விஜய்
    அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்  வட கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025