NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்
    எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு

    எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 12, 2025
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா இலக்கு வைத்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிப்பதில் எஸ் 400 அமைப்பு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    ரஷ்யாவின் இந்த திட்டம் இந்தியாவுடனான தொடர்ச்சியான மூலோபாய கூட்டாண்மையின் வெளிப்பாடாக வருகிறது.

    எனினும், இந்த தகவல் 2024லேயே ஒருமுறை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எஸ் 500

    எஸ் 500 அமைப்பின் சிறப்பம்சங்கள்

    ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை நடுநிலையாக்கும் திறன் கொண்ட எஸ் 500 ஆனது எஸ் 400 ஐ விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கூறப்படுகிறது.

    600 கிமீ வரை இடைமறிப்பு வரம்பு மற்றும் 200 கிமீ உயரக் கவரேஜ் கொண்ட எஸ் 500 அமைப்பில் 77N6-N மற்றும் 77N6-N1 இடைமறிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அருகிலுள்ள இடத்திலும் அழிக்க உதவுகிறது.

    இது 2,000 கிமீ வரை கண்டறிதல் வரம்பைக் கொண்ட மேம்பட்ட AESA ரேடார் அமைப்பை பயன்படுத்துகிறது.

    கூட்டு தயாரிப்பு

    இந்தியாவின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் கூட்டு தயாரிப்பு

    ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் இந்தியாவின் மூலோபாய தடுப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும் மற்றும் அதன் அடுக்கு வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

    எஸ் 500 அமெரிக்க THAAD அமைப்பைக் கூட மிஞ்சும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர், இது வான் பாதுகாப்பு, ஏவுகணை இடைமறிப்பு மற்றும் செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.

    நெருங்கிய ராணுவ உறவைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் ரஷ்யா ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணைகளை கூட்டாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING : Russia offers joint production of #S500 system to India. pic.twitter.com/pC96TgzX5y

    — IDU (@defencealerts) May 12, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    இந்தியா
    பாதுகாப்பு துறை
    உலகம்

    சமீபத்திய

    எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல் ரஷ்யா
    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட் உளவுத்துறை
    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர்
    'அய்யயோ, நாங்க எந்த ஆயுதமும் பாகிஸ்தானுக்கு கொடுக்கல'; சீனா விளக்கம் சீனா

    ரஷ்யா

    கஜகஸ்தானில் நடந்த விமான விபத்திற்கு அஜர்பைஜானிடம் மன்னிப்பு கேட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    ரூ.17 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் சைபர் மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டவர் குஜராத்தில் கைது சைபர் கிரைம்
    ஆரோக்கியமான குழந்தை பெறும் 25 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு ₹81,000 ஊக்கத்தொகை அறிவிப்பு; ரஷ்யாவில் அறிவிப்பு டிரெண்டிங்
    ரஷ்யாவுக்காக தனியார் படைப்பிரிவில் போட்டியிட்ட இந்திய இளைஞர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு இந்தியர்கள்

    இந்தியா

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை பாகிஸ்தான்
    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான்
    இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான் விமானப்படை

    பாதுகாப்பு துறை

    இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம் இந்தியா
    இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO  இந்தியா
    ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம்  ரஷ்யா
    எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு இந்தியா

    உலகம்

    சீனாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் அமெரிக்க ஆடம்பர பொருட்கள்; ஊடக அறிக்கை வெளியாகி பரபரப்பு அமெரிக்கா
    உலகின் பிஸியான விமான நிலையமாக துபாய் தேர்வு; டாப் 10இல் இடம் பிடித்த ஒரே இந்திய விமான நிலையம் துபாய்
    ஏலத்திற்கு வரும் மகாராஜாக்களுக்குச் சொந்தமான அரிய நீல வைரம்  ஏலம்
    ஏப்ரல் 20இல் ராணுவ சட்டத்தை அமல்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்? பரபரப்பில் அமெரிக்கா டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025