
உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைனில் ஏவியதாக திங்களன்று (ஜூன் 9) உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் முதன்மையாக நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்தன, இது ரஷ்யாவின் கோடைகாலத் தாக்குதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
தங்கள் வான் பாதுகாப்பு 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தது, சுமார் 10 ஏவுகணைகள் மட்டுமே அவற்றின் இலக்குகளை அடைந்தன என உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு குடிமகனுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விமானத் தளங்கள் மீது உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக ரஷ்யா இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இலக்குகள்
ரஷ்யாவின் முக்கிய இலக்குகள்
ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் முக்கிய இலக்குகளில் ஒன்று உக்ரைனின் ரிவ்னே பகுதியில் உள்ள டப்னோ விமானத் தளம் ஆகும்.
ஒரு எதிர் நடவடிக்கையில், உக்ரைனின் சிறப்புப் படைகள் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள சவாஸ்லிகா விமானநிலையத்தில் இரண்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்கியதாகக் கூறின, இருப்பினும் ரஷ்யா இதை உறுதிப்படுத்தவில்லை.
1,000 கிலோமீட்டர் ஃபிரன்ட்டில், உக்ரைன் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது, குறிப்பாக கிழக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்யாவின் தாக்குதல் பலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி மோசமடைந்து வரும் போர்க்கள நிலைமைகளை ஒப்புக்கொண்டு, நிலைமையை மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
அமைதிப் பேச்சுவார்த்தை
துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தைக் கண்டன, கைதிகள் மற்றும் சடலங்கள் பரிமாற்றங்கள் தொடர்பான சிறிய ஒப்பந்தங்களை மட்டுமே அளித்தன.
உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடனோவ், இந்த வாரம் சடலங்கள் பரிமாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
அதே நேரத்தில் ரஷ்யா எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் வழங்காமல் அதை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், உக்ரைன் ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்கிறது.
49 உக்ரேனிய ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்ட போதிலும், சில சுவாஷியாவில் உள்ள ஒரு ஆலை மற்றும் வோரோனேஷில் உள்ள ஒரு எரிவாயு குழாய் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.