NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா
    உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ஒரே நேரத்தில் 479 ட்ரோன்களை ஏவியது ரஷ்யா

    உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 09, 2025
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைனில் ஏவியதாக திங்களன்று (ஜூன் 9) உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதல்கள் முதன்மையாக நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்தன, இது ரஷ்யாவின் கோடைகாலத் தாக்குதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

    தங்கள் வான் பாதுகாப்பு 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தது, சுமார் 10 ஏவுகணைகள் மட்டுமே அவற்றின் இலக்குகளை அடைந்தன என உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு குடிமகனுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்ய விமானத் தளங்கள் மீது உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக ரஷ்யா இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிகிறது.

    இலக்குகள்

    ரஷ்யாவின் முக்கிய இலக்குகள்

    ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் முக்கிய இலக்குகளில் ஒன்று உக்ரைனின் ரிவ்னே பகுதியில் உள்ள டப்னோ விமானத் தளம் ஆகும்.

    ஒரு எதிர் நடவடிக்கையில், உக்ரைனின் சிறப்புப் படைகள் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள சவாஸ்லிகா விமானநிலையத்தில் இரண்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்கியதாகக் கூறின, இருப்பினும் ரஷ்யா இதை உறுதிப்படுத்தவில்லை.

    1,000 கிலோமீட்டர் ஃபிரன்ட்டில், உக்ரைன் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது, குறிப்பாக கிழக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்யாவின் தாக்குதல் பலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி மோசமடைந்து வரும் போர்க்கள நிலைமைகளை ஒப்புக்கொண்டு, நிலைமையை மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பேச்சுவார்த்தை

    அமைதிப் பேச்சுவார்த்தை

    துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தைக் கண்டன, கைதிகள் மற்றும் சடலங்கள் பரிமாற்றங்கள் தொடர்பான சிறிய ஒப்பந்தங்களை மட்டுமே அளித்தன.

    உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடனோவ், இந்த வாரம் சடலங்கள் பரிமாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

    அதே நேரத்தில் ரஷ்யா எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் வழங்காமல் அதை உறுதிப்படுத்தியது.

    இதற்கிடையில், உக்ரைன் ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்கிறது.

    49 உக்ரேனிய ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்ட போதிலும், சில சுவாஷியாவில் உள்ள ஒரு ஆலை மற்றும் வோரோனேஷில் உள்ள ஒரு எரிவாயு குழாய் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா ரஷ்யா
    டாக்டர் மாதபி லதா: ஜம்முவின் சின்னமான செனாப் ரயில்வே பாலத்தின் பின்புலமான பொறியாளர் இவர்தான்! ஜம்மு காஷ்மீர்
    சாலை விபத்தை ஏற்படுத்தியவர் கண்டறியப்படாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறலாம்; இதைத் தெரிந்து கொள்ளுங்கள் ஆயுள் காப்பீடு
    சூர்யா 46 படப்பிடிப்பு துவங்கியது; மகளுடன் ஹைதராபாத்திற்கு சென்ற நடிகர் சூர்யா நடிகர் சூர்யா

    ரஷ்யா

    உக்ரைன் போர் தொடங்கியதற்கு ஜெலென்ஸ்கியை காரணம்: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு உக்ரைன்
    மூன்று ஆண்டு போர் நிறைவை முன்னிட்டு உக்ரைன் மீது அதிகளவிலான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் உக்ரைன்
    நாட்டின் அமைதிக்காகவும், நேட்டோ உறுப்பினர் பதவிக்காகவும் ராஜினாமா செய்யத் தயார்: உக்ரைன் ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி
    பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு தாக்குதல்; பின்னணி என்ன? பிரான்ஸ்

    உக்ரைன்

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா; அடுத்து அணு ஆயுதமா? ரஷ்யா
    தலைமறைவு வாழ்க்கை வாழும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் வாரிசுகள் விளாடிமிர் புடின்
    ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார் ரஷ்யா
    உக்ரைன் மோதல் அதிகரிப்புக்கு மத்தியில் டொனால்ட் டிரம்புடன் பேச்சு நடத்த தயார் என புடின் அறிவிப்பு விளாடிமிர் புடின்

    உலகம்

    எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல் ரஷ்யா
    சர்வதேச குடும்ப தினம் 2025: குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் தினத்தின் வரலாறு மற்றும் பின்னணி சிறப்பு செய்தி
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    உலக செய்திகள்

    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025