NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
    கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

    எழுதியவர் Nivetha P
    Dec 30, 2022
    02:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,

    இந்த வைரஸ் மிக வேகமாக பரவ கூடிய தன்மை கொண்டது என்றும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

    இது சீனாவில் மட்டுமல்லாது கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதிவேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவிலும் இந்த புதுவித கொரோனா தொற்றால் இதுவரை 4 பேர் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.

    அதனால் பரவலை தவிர்க்க மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு ஏற்கனவே விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை மேலும் ஓர் புது கட்டுப்பாட்டினை அறிவித்துள்ளது.

    72 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை செய்திருக்க வேண்டும்

    ஜனவரி 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் கட்டுப்பாடு - நெகட்டிவ் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கட்டாயம்

    அதன்படி, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கட்டாயம் என்றும்,

    பயணத்திற்கு முன் பயணிகள் தாங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான, மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    இந்த கட்டுபாடானது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    இந்தியா
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    இந்தியா

    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு விமானம்
    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் தமிழ்நாடு
    இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி டிரெண்டிங்

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா
    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025