NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்?

    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்?

    எழுதியவர் Srinath r
    Dec 30, 2023
    10:02 am

    செய்தி முன்னோட்டம்

    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை நாடு கடத்த, இந்தியாவின் கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது.

    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹபீஸ் சயீதை பண மோசடி வழக்கில் நாடு கடத்த கோரும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் அலுவலர்கள் பெற்றனர்.

    ஆனால், இது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்த விதமான ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது" என தெரிவித்துள்ளார்.

    2nd

    இந்தியாவில் பல்வேறு வழக்குகளுக்காக தேடப்படும் ஹபீஸ் சயீத் 

    முன்னதாக, வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பாகிஸ்தானிடம் ஹபீஸ் சயீதை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

    "கேள்விக்குரிய நபர்(ஹபீஸ் சயீத்)இந்தியாவில் பல வழக்குகளில் தேடப்படும் நபராக உள்ளார். அவர் ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியும் கூட.

    இது சம்பந்தமாக, ஒரு குறிப்பிட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் உரிய ஆதாரங்களுடன் கோரிக்கையை வைத்துள்ளோம்" என கூறினார்.

    மேலும், அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானிடம் தெரிவித்து வருவதாக பேசிய பாக்சி, இது சமீபத்திய கோரிக்கை எனவும், பத்திரிகையாளர் சந்திப்பில் விவரித்தார்.

    3rd card

    தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் கட்சி

    லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரான சயீத், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இவர், இந்தியாவில் பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

    ஜூலை 17 2019 முதல் வேறு குற்றங்களுக்காக சிறையில் உள்ள சயீதுக்கு, லாகூர் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் ஏப்ரல் 2022ல், தீவிரவாதத்திற்கு நிதியளித்த குற்றத்திற்காக 33 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    சமீபத்திய சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக, அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலில் சையீத்தின், பாகிஸ்தான் மார்க்கசி முஸ்லிம் லீக் கட்சி, தேசிய மற்றும் மாகாண தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

    ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீதும் லாகூரில் உள்ள தேசிய சட்டமன்றத் தொகுதியான என்ஏ-127 தொகுதியில் போட்டியிட உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா
    பயங்கரவாதம்
    தீவிரவாதம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான்
    வைரல் வீடியோ: 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு நடனம் ஆடி வெற்றியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஆப்கான் கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு பாபர் அசாமை பந்தாடிய முன்னாள் பாக். வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    PAK vs SA: டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக்கோப்பை

    இந்தியா

    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல் குடியரசு தினம்
    தென்னைப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருத்துராஜ் கெயிக்வாட், இந்தியாவிற்கு திரும்பிய விராட் கோலி! டி20 கிரிக்கெட்
    பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர்
    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது  பிரான்ஸ்

    பயங்கரவாதம்

    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்
    போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன? இஸ்ரேல்
    'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு இஸ்ரேல்
    வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் இஸ்ரேல்

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025