NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை
    அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும்(NGO) பெண்கள் வேலை செய்வதற்கு தடை!(படம்: Times of India)

    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2022
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம், தாலிபான் அரசு பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து, தற்போது அந்த நாட்டு பெண்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    கடந்த ஆண்டு, தாலிபான் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது.

    அப்போதிலிருந்து, பெண்களுக்கு பலவிதமான தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    பெண்கள் ஆண் துணையில்லாமல் வெளியே செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, கடுமையான ஆடை கட்டுப்பாடுகள், டீனேஜ் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை என்று பெண்களுக்கு எதிரான பல்வேறு தடைகள் ஏற்கனவே ஆப்கானில் அமல்படுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கடந்த வாரம் தாலிபான் அரசு பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும் தடை விதித்திருக்கிறது.

    போராட்டம்

    போராட்டத்தில் குதித்திருக்கும் எதிர்ப்பாளர்கள்!

    தங்கள் கனவுகளை இப்படி உடைத்து எறிவதற்கு பேசாமல் "பெண்களின் தலையைத் துண்டிக்க உத்தரவிட்டிருக்கலாம்' என்று மருத்துவ மேல் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் இளம்பெண் ஒருவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

    மேலும் பேசிய அந்த பெண், "மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட பெண்களுக்கு இல்லை. நான் ஏன் இந்த உலகில் பிறந்தேன் என்று வருந்துகிறேன். இப்படி ஒரு உத்தரவிட்டதற்கு பதிலாக எங்கள் தலையைத் துண்டிக்க உத்திரவிட்டிருக்கலாம்." என்று கண்களில் நீரோடு கதறுகிறார்.

    இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் என்று பலதரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    மேலும், தற்போது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும்(NGO) பெண்கள் வேலை செய்வதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    இந்தியா

    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் வைரல் செய்தி
    பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள் வைரல் செய்தி
    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025