NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
    இந்தியா ராணுவ தாக்குதலுக்கு தயாராவாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அச்சம்

    இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 28, 2025
    08:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உடனடி ராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திங்களன்று (ஏப்ரல் 28) அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    இதுகுறித்து ராய்ட்டர்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தனது படைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், இந்தியாவின் சாத்தியமான நடவடிக்கையை எதிர்பார்த்து மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிப் கூறினார்.

    எனினும், அது தொடர்பான குறிப்பிட்ட விவரங்களை வெளியிடாமல், பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என மட்டுமே கூறினார்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதை இந்தியா உறுதி செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் அதை மறுத்து நடுநிலையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    விசாரணை

    நடுநிலையான விசாரணை

    பஹல்காம் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தினார்.

    ஆனால் 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு அதன் அளவிடப்பட்ட பதிலைக் குறிப்பிட்டு, நாட்டின் இறையாண்மையைக் காக்க பாகிஸ்தான் ராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பாகிஸ்தான் இந்தியாவிடம் ஆக்ரோஷமாக போனால் பாதகம் பாகிஸ்தானுக்கே என அந்நாட்டு அரசை வழிநடத்தும் தனது தம்பியான ஷேபாஸ் ஷெரீப்பை, அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.

    மேலும், இந்தியாவை சீண்டுவதை விட்டு, ராஜாங்க ரீதியில் அணுகி பிரச்சினையை முடிக்கவும் ஆலோசனை கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ

    பாகிஸ்தான்

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் கேஃஎப்சி கடைகள் மீது தாக்குதல்; ஒரு ஊழியர் பலியான பரிதாபம் பாலஸ்தீனம்
    பாகிஸ்தானில் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்து அமைச்சர் மீது தாக்குதல் உலக செய்திகள்
    பஹல்காம் தாக்கதலுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அவசர அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர்
    பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள் இந்தியா

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    இந்திய ராணுவம்

    அக்னிவீர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தியின் குற்றசாட்டையடுத்து இந்திய ராணுவம் விளக்கம் ராகுல் காந்தி
    ராணுவத்தின் உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தியப் பாதுகாப்புப் பங்குகள் 13% உயர்ந்துள்ளன பங்கு
    இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம் இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ டிரக் மீது கிரெனெட் தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் பலி ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025