NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
    உலகம்

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2023, 11:52 am 1 நிமிட வாசிப்பு
    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
    95% மருந்து பொருட்கள் இந்தியா, சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தது இறக்குமதி செய்யப்படுகின்றன.

    பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அங்கு மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகம் நிலவி வருகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் அங்கு நடைபெற இருந்த பல முக்கிய அறுவை சிகிச்சைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், இறக்குமதி செய்த்துவதிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் மந்தம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. 95% மருந்து பொருட்கள் இந்தியா, சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தது இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கு வழியில்லாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.

    மயக்க மருந்துகள் பற்றாக்குறை

    பாகிஸ்தான் வங்கி அமைப்பில் அமெரிக்க டாலர்கள் இல்லாததால், பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்களின் இறக்குமதி பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் முடங்கியுள்ளன. மேலும், அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை மருந்து உற்பத்தி செலவை அதிகரித்துள்ளன. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த அதீத மருத்துவ பற்றாக்குறையால், மிக முக்கியமான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று ANI தெரிவித்துள்ளது. இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மயக்க மருந்துகள் இரண்டு வார பயன்பாட்டிற்கும் குறைவாகவே இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், மருத்துவமனை மரணங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சுகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    பாகிஸ்தான்

    உலகம்

    SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள் நாசா
    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் பண்டிகை
    கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்! விளையாட்டு
    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பழமையான ஃப்ளஷ் டாய்லெட் சீனா

    பாகிஸ்தான்

    புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி இந்தியா
    சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு சென்னை
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் சீனா
    விக்கிபீடியா தடையை நீக்கிய பாகிஸ்தான் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023