NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
    95% மருந்து பொருட்கள் இந்தியா, சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தது இறக்குமதி செய்யப்படுகின்றன.

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2023
    11:52 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அங்கு மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகம் நிலவி வருகிறது.

    மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் அங்கு நடைபெற இருந்த பல முக்கிய அறுவை சிகிச்சைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த செய்தியை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

    பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், இறக்குமதி செய்த்துவதிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் மந்தம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

    95% மருந்து பொருட்கள் இந்தியா, சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தது இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கு வழியில்லாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.

    பாகிஸ்தான்

    மயக்க மருந்துகள் பற்றாக்குறை

    பாகிஸ்தான் வங்கி அமைப்பில் அமெரிக்க டாலர்கள் இல்லாததால், பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்களின் இறக்குமதி பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் முடங்கியுள்ளன.

    மேலும், அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை மருந்து உற்பத்தி செலவை அதிகரித்துள்ளன.

    அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த அதீத மருத்துவ பற்றாக்குறையால், மிக முக்கியமான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று ANI தெரிவித்துள்ளது.

    இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மயக்க மருந்துகள் இரண்டு வார பயன்பாட்டிற்கும் குறைவாகவே இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதனால், மருத்துவமனை மரணங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    உலகம்

    வியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சுற்றுலா
    இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை ஆஸ்திரேலியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025