NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்
    ஏப்ரல் 2022இல் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் சீனர்களுக்கு எதிராக நடந்த ஒரு முக்கிய தாக்குதலாகும்.

    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் சீனர்கள் நடத்தும் வணிகங்களை கராச்சி காவல்துறை தற்காலிகமாக மூடியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிக்கேய் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தீவிரவாதிகள் சமீப ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ள சீன வணிகங்களை குறிவைத்து வருவதாக கூறப்படுகிறது. இது இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகத்தை சீனா மூடியதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், பாகிஸ்தானில் உள்ள "மோசமான பாதுகாப்பு நிலைமை" காரணமாக சீனர்கள் ஆபத்தில் இருக்கின்றனர் என்று அதன் குடிமக்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    details

    ஏப்ரல் 2022 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல்

    "பலமுறை எச்சரித்த போதிலும், பல சீன நிறுவனங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தத் தவறியதால், அவை சீல் வைக்கப்பட்டன." என்று கராச்சி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    பெய்ஜிங் தனது சொந்த பொருளாதார நலன்களுக்காக தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது என்று பாகிஸ்தானிய மக்கள் சந்தேகிப்பதால் சீனாவுக்கு எதிரான உணர்வுகள் பாகிஸ்தானில் அதிகரித்து வருகின்றன.

    இதன் விளைவாக, சீன நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    ஏப்ரல் 2022இல் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் சீனர்களுக்கு எதிராக நடந்த ஒரு முக்கிய தாக்குதலாகும். அப்போது, கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மூன்று சீன ஆசிரியர்களும் ஒரு பாகிஸ்தானிய ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    சீனா

    லத்தீன் அமெரிக்கா மீது பறக்கும் பலூன் சீனாவுடையது தான்: பெய்ஜிங் உலகம்
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தான்
    சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா இந்தியா
    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்

    உலகம்

    உலகம் முழுவதும் உண்ணப்படும் சில விசித்திரமான உணவுகள் உணவு குறிப்புகள்
    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலக சுகாதார நிறுவனம்
    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன? சாட்ஜிபிடி
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025