NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்
    1/2
    உலகம் 0 நிமிட வாசிப்பு

    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    03:57 pm
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்
    ஏப்ரல் 2022இல் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் சீனர்களுக்கு எதிராக நடந்த ஒரு முக்கிய தாக்குதலாகும்.

    பாகிஸ்தானில் சீனர்கள் நடத்தும் வணிகங்களை கராச்சி காவல்துறை தற்காலிகமாக மூடியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிக்கேய் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் சமீப ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ள சீன வணிகங்களை குறிவைத்து வருவதாக கூறப்படுகிறது. இது இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகத்தை சீனா மூடியதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், பாகிஸ்தானில் உள்ள "மோசமான பாதுகாப்பு நிலைமை" காரணமாக சீனர்கள் ஆபத்தில் இருக்கின்றனர் என்று அதன் குடிமக்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    2/2

    ஏப்ரல் 2022 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல்

    "பலமுறை எச்சரித்த போதிலும், பல சீன நிறுவனங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தத் தவறியதால், அவை சீல் வைக்கப்பட்டன." என்று கராச்சி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பெய்ஜிங் தனது சொந்த பொருளாதார நலன்களுக்காக தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது என்று பாகிஸ்தானிய மக்கள் சந்தேகிப்பதால் சீனாவுக்கு எதிரான உணர்வுகள் பாகிஸ்தானில் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, சீன நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஏப்ரல் 2022இல் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் சீனர்களுக்கு எதிராக நடந்த ஒரு முக்கிய தாக்குதலாகும். அப்போது, கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மூன்று சீன ஆசிரியர்களும் ஒரு பாகிஸ்தானிய ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பாகிஸ்தான்
    சீனா
    உலகம்

    பாகிஸ்தான்

    2026க்குள் 77 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டும் உலகம்
    பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு யுகே
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான் கான்

    சீனா

    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு  இந்தியா
    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை  உலகம்
    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா!  செயற்கை நுண்ணறிவு

    உலகம்

    உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள் இந்தியா
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் அமெரிக்கா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள் வட கொரியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023