NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை
    அடுத்த செய்திக் கட்டுரை
    டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை
    96 மணி நேரத்திற்கு பிறகும் அவர்களை அமெரிக்க மற்றும் கனட கடற்படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை

    எழுதியவர் Sindhuja SM
    Jun 26, 2023
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் டைட்டன் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த சுலேமான் தாவூத் என்ற 19 வயது இளைஞன், கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ரூபிக்ஸ் கியூபை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாயார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    தனது மகன் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், கடலுக்கடியில் ரூபிக்ஸ் கியூபை தீர்க்கும் போது அதை படம் பிடிக்க கேமராவை எடுத்து சென்றதாகவும் சுலேமான் தாவூத்தின் தாயார் தெரிவித்திருக்கிறார்.

    அமெரிக்காவின் வட அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது, கடலுக்கு அடியில் நசுங்கியது.

    உள்நோக்கி வெடித்தல்(Implode) என்று கூறப்படும் இந்த நசுங்குதல் கடலுக்கு அடியில் இருக்கும் அதிக அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஞ்சாங்க

    "3,700-மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போகிறேன்": சுலேமான்

    இந்த நீர்மூழ்கியில் பயணித்த 5 பேரை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு 4 நாட்கள் தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வந்தது.

    ஆனால், 96 மணி நேரத்திற்கு பிறகும் அவர்களை அமெரிக்க மற்றும் கனட கடற்படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து, அந்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள் அதற்கு மேலும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

    அதனால், சுலேமான் தாவூத், அவரது தந்தை உட்பட அந்த நீர்மூழ்கியில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்திருக்கும் சுலேமானின் தாயார், "டைட்டானிக் கப்பலில், 3,700-மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போகிறேன்" என்று தன்னிடம் தன் மகன் கூறியதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    கனடா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  சீனா
    பணிநீக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்த ரெட்டிட்! தொழில்நுட்பம்
    ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர் ரஷ்யா

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலக செய்திகள்

    உலகம்

    சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்  ஜப்பான்
    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர் இந்தியா
    சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம் உலக செய்திகள்
    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன  உலகம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா
    வட கொரிய உளவு செயற்கைக்கோளின் புகைப்படங்களை வெளியிட்ட தென் கொரியா வட கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025