NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நிஜ்ஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் மாணவர் விசாவில் கனடாவிற்குள் நுழைந்தார்: அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிஜ்ஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் மாணவர் விசாவில் கனடாவிற்குள் நுழைந்தார்: அறிக்கை
    கொலை செய்யப்பட்ட காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    நிஜ்ஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் மாணவர் விசாவில் கனடாவிற்குள் நுழைந்தார்: அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2024
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர், ஸ்டுடென்ட் விசா பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்ததாக கனடாவை தளமாகக் கொண்ட குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    மே 3ஆம் தேதி மேலும் இருவருடன் கைது செய்யப்பட்ட கரண் ப்ரார் என்பவர், 2019இல் வெளியிடப்பட்ட வீடியோவில், பஞ்சாபின் பதிண்டாவில் உள்ள EthicWorks இமிக்ரேஷன் சர்வீசஸ் மூலம், மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்ததாகவும், சில நாட்களில் அதைப்பெற்றதாகவும் கூறினார்.

    சாதாரணமாக, கனடா மாணவர் விசா பெறுவதற்கு தோராயமாக 7-9 வாரங்கள் ஆகும்.

    EthicWorks இமிக்ரேஷன் சர்வீசஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், பிரார் ஒரு கனேடிய ஸ்டுடென்ட் விசா வைத்திருக்கும் புகைப்படத்துடன் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.

    இருப்பினும் அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.

    கனடாவில் ப்ரார்

    ஸ்டுடென்ட் விசாவில் கனடா சென்ற ப்ரார்

    ஏப்ரல் 30, 2020 அன்று ப்ரார் கால்கேரியின் போ வேலி கல்லூரியில் படிக்கத் தொடங்கினார் என்று குளோபல் நியூஸ் அறிக்கை கூறியது. அவர் மே 4, 2020 அன்று எட்மண்டனுக்குச் சென்றார்.

    இது குறித்து அக்கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரார் எட்டு மாத மருத்துவமனை பிரிவு எழுத்தர் திட்டத்தில் சேர்ந்தார்.

    இருப்பினும், நிஜ்ஜாரின் கொலைக்காக கைது செய்யப்பட்டவர், அதே நபரா என்பதை செய்தித் தொடர்பாளரால் உறுதிப்படுத்த முடியவில்லை என இந்தியா டுடே செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

    இருப்பினும், கல்லூரி "Ethicworks இமிக்ரேஷன் சர்வீசஸ்" என்ற நிறுவனத்துடன் ஒருபோதும் இணைந்திருக்கவில்லை" என்றும் கூறியது.

    கைது

    நிஜ்ஜார் கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது

    ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் இதுவரை மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மூவருமே, மே 3 அன்று ஆல்பர்ட்டாவின் எட்மண்டனில் கைது செய்யப்பட்டனர் மற்றும் முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

    பிராரைத் தவிர, மற்ற இருவரும் கரன்ப்ரீத் சிங், 28, மற்றும் கமல்ப்ரீத் சிங், 22 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரத்தையும் கனேடிய காவல்துறை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜூன் 18, 2023 அன்று சர்ரேயில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே ஹர்தீப் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    விசா
    கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு இங்கிலாந்து

    விசா

    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது இஸ்ரேல்
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  கனடா
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா கனடா

    கொலை

    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை டெல்லி
    ஜார்ஜ் ஃப்லாய்ட்டை கொன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற முன்னாள் காவல் அதிகாரி, கத்தியால் குத்தப்பட்டார் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025