NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ
    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 17, 2024
    09:57 am

    செய்தி முன்னோட்டம்

    கனடா நாட்டின் வெளிநாட்டு தலையீடு விசாரணைக்கு முன் சாட்சியமளித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவதற்கு கனடா உளவுத்துறை வழங்கிய உளவு தகவல் மட்டுமே ஆதாரம் என்றும், வேறு வலுவான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு இந்தியாவிடம் கனேடிய ஏஜென்சிகள் கேட்டபோது, ​​புதுடெல்லி அதற்கான ஆதாரத்தை நாடியதாக அவர் கூறினார். "அந்த நேரத்தில், அது முதன்மையாக உளவு தகவல் மட்டுமே, வலுவான ஆதாரங்கள் அல்ல," ட்ரூடோ ஒப்புக்கொண்டார்.

    ஆதாரம் ஏதும் வழங்காமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக கனடா மீது இந்திய அரசு பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குற்றச்சாட்டு

    பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டதாக ட்ரூடோ தெரிவித்தார்

    2023 செப்டம்பரில் புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர், கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்தினார்.

    "நான் உட்கார்ந்து (பிரதமர் மோடியுடன்), அவர்கள் (நிஜ்ஜார் கொலையில்) ஈடுபட்டுள்ள தகவலை தெரிவித்தேன். அதைப் பற்றி உண்மையான கவலையை வெளிப்படுத்தினேன். அவர் வழக்கமான பதிலுடன் பதிலளித்தார், அதாவது இந்தியா அரசிற்கு எதிராக பேசுபவர்கள் கனடாவில் வெளியப்படையாக உள்ளனர் எனவும் அவர்கள் கைது செய்யப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன் எனவும் மோடி தெரிவித்தார்" என்று அவர் கூறினார்.

    விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுத்ததாகவும், தனது அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்களை இரட்டிப்பாக்கியது என்றும் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

    இது "கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியது" என்பதை தெளிவுபடுத்தியது என்றார்.

    விசாரணைக்குழு

    விசாரணைகுழு முன் ஆஜரான கனடாவின் பிரதமர் 

    கனடாவில் காலிஸ்தான் சார்பு இயக்கத்தின் உறுப்பினர்களை குறிவைக்க இந்திய இராஜதந்திரிகள் தகவல்களை சேகரிப்பதிலும், குற்றக் கும்பல்களைப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டதாக கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டுக்குப் பிறகு, ட்ரூடோ இந்த விசாரணை குழு முன் ஆஜரானார்.

    நிஜ்ஜார் கொலையில் இந்திய முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு "நம்பகமான ஆதாரங்கள்" இருப்பதாக அவர் கமிட்டியின் முன் தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.

    நிஜ்ஜார் கொலையில் ஈடுபட்டதற்காக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையால் (RCMP) முன்னர் குறிப்பிடப்பட்ட கேங்க்ஸ்டர், லாரன்ஸ் பிஷ்னோய் என்றும் ட்ரூடோ பெயரிட்டார். இந்திய தூதர்கள் கனேடியர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு அனுப்புவதாக ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
    ஜஸ்டின் ட்ரூடோ

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்
    அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில் அமெரிக்கா
    இந்தியா-கனடா பிரச்சனை: கனடா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் வீழ்ச்சி  இந்தியா

    இந்தியா

    உலகிற்கே முன்னோடியாக உள்ள இந்தியாவின் உணவு நுகர்வு முறை; உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையில் பாராட்டு உணவு பிரியர்கள்
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    கிரெட்டாவிற்கு பிறகு மேலும் மூன்று எலக்ட்ரிக் கார்கள்; ஹூண்டாய் இந்தியா அதிரடி திட்டம் ஹூண்டாய்
    இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் 'மகாகாளி'யின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சி வெளியானது திரைப்படம்

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்? கனடா
    இந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள் கனடா

    ஜஸ்டின் ட்ரூடோ

    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா
    இந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்  இந்தியா
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    எல்போகேட் முதல் ஜி20 பயணம் வரை: சர்ச்சைகளில் சிக்கும் ஜஸ்டின் ட்ரூடோ உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025