NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லாஸ் ஏஞ்சல்ஸ் மீண்டும் பரவும் காட்டுத்தீ: 50,000 மக்களை வெளியேற்ற உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    லாஸ் ஏஞ்சல்ஸ் மீண்டும் பரவும் காட்டுத்தீ: 50,000 மக்களை வெளியேற்ற உத்தரவு
    புதிய தீ, 9,400 ஏக்கர் நிலத்தை எரித்துள்ளது

    லாஸ் ஏஞ்சல்ஸ் மீண்டும் பரவும் காட்டுத்தீ: 50,000 மக்களை வெளியேற்ற உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2025
    08:48 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ அடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தற்போது ஒரு புதிய 'Hughes Fire' உருவாகியுள்ளது.

    இது கிட்டத்தட்ட 50,000 க்கும் மேற்பட்ட மக்களை நகரை விட்டு வெளியேற தூண்டியுள்ளது.

    கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறையின்படி, புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட புதிய தீ, 9,400 ஏக்கர் நிலத்தை எரித்துள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பகுதியான கேஸ்டாயிக் ஏரிக்கு அருகே, மூன்றாவது வாரமாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அழிவுகரமான ஈடன் மற்றும் பாலிசேட்ஸ் தீயில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு வரை இருண்ட புகை மூட்டம் காணப்பட்டது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    உடல்நலக் கவலைகள்

    காட்டுத்தீ சாம்பலால் அதிகரிக்கும் உடல்நலக்கவலைகள்

    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர், எரிந்த தீயில் இருந்து கிளம்பும் சாம்பலை காற்று எடுத்துச் செல்லக்கூடும் என்று எச்சரித்தார்.

    நச்சுக் காற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிய நகரத்தின் இணையதளத்தைப் பார்வையிடுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    LA கவுண்டி பொது சுகாதார இயக்குனர் பார்பரா ஃபெரர், சாம்பல் கன உலோகங்கள், ஆர்சனிக் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    "சிறிய வெளிப்பாடு கூட சரும எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் மிகவும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்" என்று கூறினார். பாதுகாப்பு கியர் அணியுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லாஸ் ஏஞ்சல்ஸ்
    காட்டுத்தீ

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    லாஸ் ஏஞ்சல்ஸ்

    LA காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு, 12,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிவு காட்டுத்தீ
    லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் 2025 ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிப்பை ஒருவாரம் தாமதமாக வெளியிட முடிவு ஆஸ்கார் விருது

    காட்டுத்தீ

    LA காட்டுத்தீ எதிரொலி: 96 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்கர் விருதுகள் ரத்து செய்யப்படுமா? ஆஸ்கார் விருது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025