NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு 
    இந்த 5 குற்றங்களுக்காக அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 01, 2023
    12:55 pm

    செய்தி முன்னோட்டம்

    புத்த தவக்காலத்தை முன்னிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி உட்பட 7,000 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவ அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    2020இல் மியான்மாரில் நடந்த தேர்தலில் ஜனநாயகப் பிரமுகர் ஆங்-சான்-சூகியின் கட்சி வெற்றி பெற்றது.

    அப்போது நடந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக ஆங் சான் சூகியின் மீது குற்றம் சாட்டிய ராணுவம், பிப்ரவரி 1, 2021அன்று மியான்மர் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

    இவை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சூகி மற்றும் பிற உயர்மட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைபிடித்தது.

    சில ஜே

    ஐந்து குற்றங்களில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட இருக்கிறது

    ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து, ஆங் சான் சூகியின் மீது 19 வழக்குகள் போடப்பட்டிருக்கிறது.

    இந்த குற்றசாட்டுகள் எல்லாம் போலியானது என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

    ஆனால், ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கின்றனர்.

    இந்நிலையில், மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றங்களில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த 5 குற்றங்களுக்காக அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

    கடந்த வாரம் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி, ஆட்சி கவிழ்ப்பு நடந்ததில் இருந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மியான்மர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்

    உலகம்

    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்  பாகிஸ்தான்
    பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    சிறந்த சாலையோர இனிப்பு வகைகள் பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்திய இனிப்புகள் இந்தியா
    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் ஐரோப்பா

    உலக செய்திகள்

    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் சீனா
    ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்
    நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025